தமிழகத்தில் ஒரே நாளில் 5,956 பேருக்கு கொரோனா; 6,008 பேர் டிஸ்சார்ஜ்; 91 பேர் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 6,008 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 91 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் தற்போது 3-வது இடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா முதல் 2 இடங்களில் உள்ளன.

TN reported 5,956 new coronavirus positives

தமிழகத்தில் திங்கள்கிழமை மட்டும் மேலும் 5,956 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்திருக்கிறது.

கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 91 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா மரணங்கள் மொத்த எண்ணிக்கை 7,322 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 6,008 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 3,68,141 ஆகும்.

தற்போதைய நிலையில் தமிழகத்தில் மொத்தம் 52,578 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்களில் சென்னையில் 1150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கோவையில் மொத்தம் 589 பேருக்கும் செங்கல்பட்டில் 347 பேருக்கும் கடலூரில் 307 பேருக்கும் ஒரேநாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+