தமிழகத்தில் ஒரே நாளில் 5,892 பேருக்கு கொரோனா; 92 பேர் உயிரிழப்பு!
சென்னை: தமிழகத்தில் வியாழக்கிழமையன்று ஒரேநாளில் 5892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 92 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் 6110 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் மாநிலங்கள் அளவில் தமிழ்நாடு 3-வது இடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிராவும் ஆந்திராவும் முதல் 2 இடங்களில் இருக்கின்றன.

தமிழகத்தில் வியாழக்கிழமை மட்டும் ஒரேநாளில் 5892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 4,45,851 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 92 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7,608 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 6110 பேர் இன்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 3,86,173.
தமிழகத்தில் மொத்தம் 52,070 பேர்தான் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை (ஆக்டிவ் கேஸ்கள்) பெற்று வருகின்றனர். மாவட்டங்களில் சென்னையில் இன்று 1,000க்கும் கீழே கொரோனா பாதிப்பு உறுதியானது.
சென்னையில் மொத்தம் 968 பேருக்கும் பிற மாவட்டங்களில் 4924 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. இதில் கோவை, கடலூர் மாவட்டங்களில் 500ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு. கோவையில் 593, கடலூரில் 590 பேருக்கும் வியாழக்கிழமையன்று கொரோனா உறுதியானது.












Click it and Unblock the Notifications