அரசியலுக்கு குட்பை சொல்வேனேதவிர பாஜகவில் ஒருபோதும் சேரவே மாட்டேன்:காங். ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் கட்சி மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக இருந்த போதும் கட்சியில் தமக்கு முக்கியத்துவம் இல்லை என்பது ரங்கராஜன் மோகன் குமாரமங்கலத்தின் ஆதங்கம். இதனை வெளிப்படுத்தும் வகையில் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. 10 ஆண்டுகாலம் என்பது மிக நீண்டதாகும்.
நான் அரசியலைவிட்டு வேண்டுமானால் விலகுவேன். ஆனால் ஒருபோதும் பாரதிய ஜனதா கட்சியில் சேரமாட்டேன். அவர்களுக்கும் எனக்கும் இடையே வாழ்நாள் யுத்தம் இருக்கிறது.
இவ்வாறு ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் பதிவிட்டுள்ளார். அவரது ஆதரவாளர்கள் பலரும் இந்த கருத்தை ஆதரித்து பதிவிட்டு வருகின்றனர்.

ஒருசிலர் திமுகவில் இணைந்து ஓமலூர் அல்லது சேலம் தொகுதியில் போட்டியிடுங்கள் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications