பெரியார் சிலை அவமரியாதை.... சமூக அமைதி சீர்குலைய யார் காரணம்... டிடிவி தினகரன்!!
சென்னை: ''கோவை சுந்தராபுரத்தில் தந்தை பெரியாரின் சிலை மீது காவி வண்ணம் பூசி அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது'' என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து தினகரன் தனது ட்விட்டர் பதிவில், ''மறைந்த தலைவர்களை அவமதிப்பதன்மூலம் சமூக அமைதி சீர்குலைய யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இத்தகைய நிகழ்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவை சுந்தராபுரத்தில் தந்தை பெரியாரின் சிலை மீது காவி வண்ணம் பூசி அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.1/2
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 17, 2020
கோவையில் இருக்கும் சுந்தராபுரத்தில் இன்று காலை பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசி மர்ம நபர்கள் அவமரியாதை செய்து இருந்தனர். சம்பவம் அறிந்து அந்த இடத்திற்கு வந்து இருந்த பெரியார் தொண்டர்கள், திகவினர், திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் சக்திவேல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மறைந்த தலைவர்களை அவமதிப்பதன்மூலம் சமூக அமைதி சீர்குலைய யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 17, 2020
அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இத்தகைய நிகழ்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். 2/2 @CMOTamilNadu
கொரோனா தடுப்பூசி.. அடிமடியிலேயே கைவைக்க பார்த்த ரஷ்யா.. அதிர்ந்த இங்கிலாந்து.. மேலை நாடுகள் ஷாக்