TNPSC Results.. குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் எப்போது.. வெளியான அடிதூள் அறிவிப்பு.!
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அரசு வேலை மீது எப்போதும் தனி ஈர்ப்பு இருக்கவே செய்கிறது. பணி உத்தரவாதம் உள்ளிட்ட காரணங்களால் இப்போதும் நம்ம ஊர் இளைஞர்கள் அரசு வேலைக்கே ரெடியாகிறார்கள்.

மத்திய அரசின் வேலைகளுக்கும் சரி மாநில அரசின் வேலைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் முயல்கிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் தேர்வு எழுதுபவர்களைப் பார்த்தாலே இது நமக்குப் புரியும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே இருக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தான் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு நடைபெற்ற க்ரூப் 4 தேர்வு முடிவுகள் பல மாதங்கள் வெளியாகாமலேயே இருந்தது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்தச் சூழலில் க்ரூப் 1 தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவலைத் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் துணை ஆட்சியர், போலீஸ் எஸ்பி, உதவி ஆணையர் உள்ளிட்ட 92 இடங்களை நிரப்பத் தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 1,90,957 பேர் எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், தேர்வர்களுக்குக் கவலை ஏற்பட்டது.
இந்தச் சூழலில் குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் இந்த மாதம் (ஏப்ரல்) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 5446 பணியிடங்களை நிரப்பக் கடந்த பிப். மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அது வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்து சமய அறநிலையத்துறையில் கிரேடு 3 மற்றும் கிரேடு 4 பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications