தமிழகத்தில் யார் ஆட்சி என்பதை நிர்ணயிக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் ஆளும் கட்சியின் ஆட்சி தொடருமா இல்லை கவிழுமா என்பதை முடிவு செய்யும் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் 38 மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டசபை தேர்தல்களுக்கும் மற்றும் புதுவையிலும் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களிக்கத் தொடங்கினர்.

மக்களவைத் தேர்தல் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவுக்கு சட்டசபை இடைத்தேர்தலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த தேர்தல்தான் தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி தொடருமா இல்லை கவிழுமா என்பதை நிர்ணயிக்கும் தேர்தல் ஆகும்.
இதில் திருவாரூர் தவிர்த்து ஏனைய தொகுதிகளில் இருந்த எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தேர்தல் நடைபெறுகிறது. மேலும் திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு மே 19 -ஆம் தேதி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications