நாளை காலை இதே வேளை வள்ளுவர் மறை முகப்போவியம்! காத்திருப்பேன் உங்கள் கருத்துக்காக.. வைரமுத்து
சென்னை: திருக்குறளுக்கு உரை எழுதியுள்ள வைரமுத்து, அதற்கு, வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்று பெயர் வைத்துள்ளார். இந்த உரை வரும் ஜூலை 13 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், நாளை காலை இதே வேளை 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' முகப்போவியம் வெளியிடுகிறோம் என்று வைரமுத்து இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகப்பொதுமறைகளில் ஒன்றாக விளங்குவது திருக்குறள். இதில் உள்ள அறத்து பால், பொருட் பால், இன்பத்து பால் ஆகியவற்றிற்கு கவிப்பேரரசு வைரமுத்து உரை எழுதியுள்ளளார். வைரமுத்துவின் இந்த உரை வரும் ஜூலை 13 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்த நூலின் பெயர் "வள்ளுவர் மறை வைரமுத்து உரை" என்பதாகும். இந்த திருக்குறளுக்கு வைரமுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு உரை எழுத தொடங்கினார். 1330 குறள்களுக்கும் கடந்த மே மாதம் 22- ஆம் தேதியுடன் உரையை எழுதி முடித்துள்ளார்.
இந்த வள்ளுவர் மறை வைரமுத்து உரை வரும் ஜூலை 13 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், நாளை காலை இதே வேளை 'வள்ளுவர் மறைவைரமுத்து உரை' முகப்போவியம் வெளியிடுகிறோம் என்று வைரமுத்து இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
"நாளை காலை இதே வேளை 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' முகப்போவியம் வெளியிடுகிறோம். காதலிக்கு எழுதிய முதல் கடிதத்தின் மறுமடலுக்கு ஏங்கும் காதலன் போலக் காத்திருப்பேன் உங்கள் கருத்துக்காக! " என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கன்னியாகுமரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்த திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவில் உரையாற்றிய வைரமுத்து, திருக்குறளுக்கு உரை எழுதப் போவதாக கூறியிருந்தார். இந்த அறிவிப்பின் படி, திருக்குறளுக்கு உரை எழுதி முடித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
திருக்குறளுக்கு இதுவரை பரிமேலழகர், வ.உ.சிதம்பரனார், திரு.வி.கல்யாணசுந்தரனார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தேவநேய பாவாணர், நாமக்கல் கவிஞர், மு.வரதராசனார், புலவர் குழந்தை, சி.இலக்குவனார், கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் உரை எழுதியுள்ளனர். இந்த உரைகளில் இருந்து தனது உரை மாறுபட்டதாக இருக்கும் என்றும் வைரமுத்து கூறியிருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications