Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அகவிலைப்படி உயர்வு.. 7 ஆயிரம் பேருக்கு நடந்தது தெரியுமா? முதல்வரின் தனிப்பிரிவில் பறந்த கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அகவிலைப்படி உயர்வு பெறாமலேயே மரணமடைந்து விட்டனர். குறைவான ஒய்வூதியம் (ரூ.5,000-6000) பெறுவோரும் பல்வேறு நோய்களுக்கு இடையே வறுமையில் சிக்கி உழன்று கொண்டிருக்கின்றனர் எனவே அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 1998-க்கு முன்பு வரை வருங்கால வைப்பு நிதித் திட்ட ஓய்வூதியத்தில் இருந்த போக்குவரத்து கழக தொழிலாளர்க்ள, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் ஓய்வூதிய நம்பகம் என்ற அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டார்கள். ஓய்வூதியத் திட்டத்தைச் சீரமைக்க கடந்த 2008இல் சீரமைப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. மேலும், கடந்த 2010 ஆம் ஆண்டில் ஓய்வூதிய நம்பகத்துக்கு வருமான வரிச் சட்டத்திலிருந்து விலக்கும் பெறப்பட்டது. இந்த நடவடிக்கை போக்குவரத்து தொழிலாளர்களை பாதித்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

Transport Corporation pensioners have demanded that action should be taken to speed up the DA increase

இதேபோல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்போதெல்லாம் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களும் அகவிலைப்படி உயர்வு பெறத் தகுதி பெற்றவர்கள் என்பது விதியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்தும் பயனில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் ஓய்வூதியர்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல மீட்பு சங்க துணைச் செயலாளர் என்.லோகநாதன், சென்னை மண்டலத் தலைவர் ஏ.அப்துல் அஜீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், முதல்வரின் தனிப் பிரிவு, இளைஞர் நலத்துறை அமைச்சர் அலுவலகம், தலைமைச் செயலர், போக்குவரத்து செயலர், மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட போக்குவரத்துக் கழகங்களில் அவரால் வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை பெற்று ஆயிரக் கணக்கானோர் வாழ்ந்து வருகிறோம். இந்த ஓய்வூதியத்தில் அவ்வப்போது உயரும் அகவிலைப்படியை 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நிதிநிலையை காரணம் காட்டி வழங்கவில்லை.

தற்போது வரை சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அகவிலைப்படி உயர்வு பெறாமலேயே மரணமடைந்து விட்டனர். குறைவான ஒய்வூதியம் (ரூ.5,000-6000) பெறுவோரும் பல்வேறு நோய்களுக்கு இடையே வறுமையில் சிக்கி உழன்று கொண்டிருக்கின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வு பணப்பலன்களை நம்பி மகளின் திருமணம், மகன் கல்வி, வீடு கட்ட வாங்கிய கடன் போன்றவற்றை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, எங்கள் சூழலை உணர்ந்து அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+