கிளாம்பாக்கம் அரசு பஸ்ஸில் டாப்பில் யாரு சார்.. அமைச்சர் சிவசங்கரை பார்த்ததுமே திகைத்து போன மக்கள்
சென்னை: தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளுக்கும், ஆம்னி பேருந்துகளுக்கும் டிக்கெட் கட்டணத்தில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. ஆம்னி பேருந்துகளில் வார இறுதிகளில் 1000க்கணக்கில் கொட்ட வேண்டும். ஆனால் அரசு பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் ஒரே மாதிரி தான் இருக்கும். ஏழை எளிய மக்கள் பலர் எஸ்இடிசி எனப்படும் விரைவு பேருந்துகளில் பயணிக்கிறார்கள். இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை கிளாம்பாக்கம் முதல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வரை எஸ்இடிசி பேருந்தில் தான் பயணித்தார்.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை ஆங்கிலத்தில் சுருக்கமாக எஸ்இடிசி என்று அழைப்பார்கள். இந்த பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் கோவை, பெங்களூரில் இருந்தும் பல்வேறு நகரங்களுக்கு எஸ்இடிசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு பேருந்துகளை பொறுத்தவரை கட்டணம் எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கும்.

சென்னையில் இருந்து கோவைக்கோ மதுரைக்கோ 500க்குள் டிக்கெட் எடுத்து எஸ்இடிசி பேருந்தில் பயணிக்க முடியும். படுக்கை வசதி பேருந்துகளுமே ஏசி என்றால் அதிகபட்சம் 900 என்கிற அளவில் தான் இருக்கும். ஏசி அல்லாத பேருந்துகள் 750 முதல் 800 வரையில் இருக்கும். இந்த கட்டணம் எப்போதுமே நிலையானதாக இருக்கும்.
ஆனால் ஆம்னி பேருந்துகள் கூட்டம் இல்லாத நாளில் ஒரு கட்டணமும், கூட்டம் உள்ள நாளில் ஒரு கட்டணமும் வசூலிக்கின்றன. உதாரணமாக சென்னையில் இருந்து ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் ஒரு கட்டணமும், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் ஒரு கட்டணமும் வசூலிக்கின்றன. அதாவது சென்னையில் இருந்து ஊருக்கு மக்கள் அதிகமாக செல்லும் நாட்களில் கட்டணம் அதிகமாக இருக்கும். அதேபோல் ஊர் திரும்பும் நாளிலும் கட்டணம் அதிகமாக இருக்கும். மக்கள் அதிகம் பயணிக்காத வார நாட்களில் மட்டுமே கட்டணம் குறைவாக இருக்கும்.
ஆம்னி பேருந்துகளில் பணக்காரர்கள் பலர் பயணிக்கிறார்கள். எஸ்இடிசி பேருந்துகளில் நடுத்தர வர்க்கத்தினர், ஏழை எளிய மக்கள் விரும்பி பயணிக்கிறார்கள். இந்நிலையில் எஸ்இடிசி பேருந்துகளை பொறுத்தவரை மற்ற ஆம்னி பேருந்துகளை போல் வேளச்சேரி வரையிலோ அல்லது திருவான்மியூர் வரையிலோ பயணிப்பது இல்லை.
அதேபோல் கோயம்பேடும் செல்வது இல்லை என்பதால் தான் ஆம்னி பேருந்துகளை மக்கள் நாடும் நிலை இருப்பதாக ஆதங்கம் உள்ளது. இந்த நிலை மாறவேண்டும் என்றும், அடையாறு, கோயம்பேடுக்கு கணிசமான பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. குறைந்த பட்சம் தாம்பரம் வரையில் இயக்கினால் அரசு பேருந்துகளில் பயணிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை கிளாம்பாக்கம் முதல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வரை அரசு விரைவு பேருந்தில் தான் பயணித்தார். அமைச்சர் சிவசங்கரின் சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தேவனூர் ஆகும். அமைச்சர் சிவசங்கர் தனது சொந்த ஊருக்கு செல்ல நேற்று அரசு பேருந்தில் பயணித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அரசு பேருந்தில் அமைச்சர் சிவசங்கரை பார்த்ததுமே டிரைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களுமே வியந்து போனார்கள்.. டிரைவர்களுடன் கலகலப்பாக பேசியபடி, அமைச்சர் சிவசங்கர் நேற்று சொந்த ஊர் சென்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications