சென்னைவாசிகளே.. நோட் பண்ணிக்குங்க.. மெட்ரோ பயணிகளுக்கு "இது" தான் கட்டாயம்.. அதுவும் நாளைக்கே அமல்
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் இனி பயணிக்கும் பயணிகளுக்காக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இது சென்னைவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சென்னை மெட்ரோவில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. அந்தவகையில், தற்போது, சென்னையில் மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடம் கட்டண முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயிலில் செல்லும் பயணிகள் இங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு, அதன்பிறகு மெட்ரோவில் ஏறி சென்று வருகின்றனர்... இதற்கு கட்டணமாக 6 மணிநேரத்துக்கு டூவீலர் வாகனங்களுக்கு ரூ.20-ம், காருக்கு ரூ.30-ம் வசூலிக்கப்படுகிறது.

சில்மிஷம்: ஆனால், இப்படி வாகனம் நிற்கும் இடத்தில் சிலர் ஜோடியாக வாகனத்தில் வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு, அதற்கு கட்டணத்தையும் செலுத்திவிட்டு மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.. சிலர் சில்மிஷங்களிலும் ஈடுபட்டும் வருகின்றனர்.. மேலும் சிலர் வாகனங்களில் உள்ளே இருந்து கொண்டே சிகரெட் பிடிப்பதும், தண்ணி அடிப்பதும் என பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடக்கின்றன.. இதனால் அங்கு பல்வேறு பிரச்சினைகளும் உருவாகிவிடுகிறது..
பொதுஇடத்தில் இவ்வாறு செய்யக்கூடாது என்று ஊழியர்கள், அதை தட்டிக்கேட்டாலும், "நீ யார் அதை கேட்க? வண்டி நிறுத்துவதற்குதான் கட்டணம் செலுத்தி விட்டோமே? நாங்கள் என்ன செய்தாலும் தட்டிக் கேட்க நீங்கள் யார்? என்று வாய் தகராறும் வெடித்து விடுகின்றன.. இதை தடுக்காவிட்டால் அசம்பாவிதங்கள் நிகழலாம் என்று பலரும் எச்சரித்துவந்ததுடன், இதுதொடர்பாக நிறைய புகார்கள் மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரிகளுக்கும் சென்றபடியே இருந்தன.. இதையடுத்து, அனைத்து வாகன நிறுத்தும் இடத்திலும் வாகனத்தை நிறுத்திவிட்டு உரிமையாளர்கள் உடனடியாக வெளியில் சென்றுவிட உத்தரவிடப்பட்டது..
கெடுபிடி: மேலும், வாகனத்தில் உட்காருவதற்கு யாருக்கும் அனுமதியில்லை என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையினை அனைத்து மெட்ரோ ரெயில் நிலைய நுழைவு வாயிலிலும் அதிகாரிகள் வைத்துள்ளனர். அதேபோல, சில நாட்களுக்கு முன்பு, மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு மெட்ரோ பயண அட்டை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இன்னொரு அதிரடியை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது.
அதன்படி, மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டை இருந்தால் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதி என மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.. அதாவது, பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் என்றும்,

நாளை முதல் அமல்: இந்த நடைமுறையானது மிகவும் திறமையான, வசதியான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், பணப்புழக்கத்தை குறைக்க வேண்டிய தேவைக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்தது. இதன் மூலம் பயணிகள் வாகன நிறுத்தும் இடங்களில் வேகமாக நுழைவது, வெளியேறுவது, பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை, பணமில்லா பரிவர்த்தனைகள் போன்ற நன்மைகள் கிடைக்கும். மேலும், பயணிகள் மெட்ரோ ரயில் பயண அட்டையை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களிலும், வாகன நிறுத்தும் இடத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
வாகன நிறுத்தும் இடத்துக்கான அனுமதி பயண அட்டைகளுடன் மட்டுமே இந்த பயண அட்டை கிடைக்கும்... அதனால், அனைத்து பயணிகளும் மெட்ரோ ரயில் பயண அட்டைகளை விரைவாக பெற வேண்டும்" என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது.. அந்தவகையில், நாளைய தினம், அதாவது ஏப்ரல் 19-ம் தேதியில் இருந்து இந்த முறை அமலுக்கு வர உள்ளது... நாளை முதல், அனைத்து மெட்ரோ ஸ்டேஷன்களிலும் இருக்கும் பார்கிங் இடங்களிலும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க பணத்திற்குப் பதிலாக மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்...
பார்க்கிங் ஏரியா: பார்கிங் ஏரியாக்களில் வாகனத்தை வேகமாக இயக்குவதையும் இதன் மூலம் தடுக்கப்படுவதுடன், பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையும் இதன் மூலம் ஏற்படுத்தப்படும் என்றும் நம்பப்படுகிறது.. இந்த மெட்ரோ அட்டையை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களிலும், மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இதே அட்டையைப் பயன்படுத்தி நாம் மெட்ரோ ரயில்களில் பயணங்களையும் இனி நாம் மேற்கொள்ளலாம். மெட்ரோ இணையதளத்திலும் இந்த அட்டைக்கு ரீ-சார்ஜும் செய்து கொள்ளலாம்..!!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications