நீட் பாணியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு மையங்கள் (TRBPG Exams).. விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி
Recommended Video
சென்னை: நீட் பாணியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு மையங்கள் தொலைதூர மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டன..

விண்ணப்பிக்கும்போதே தேர்வு மையங்களுக்கான ஆப்சன்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இதனடிப்படையில் முதலில் சொந்த மாவட்டங்களையும் பின்னர் பக்கத்தில் உள்ள மாவட்டங்களையும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்திருந்தனர்.
இந்த தேர்வுகள் நாளை முதல் 29-ந் தேதி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் தேர்வு மாதிரியையும் ஆசிரியர் தேர்வு வாரியம் இணையத்தில் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை டவுன் லோடு செய்த விண்ணப்பதாரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். விண்ணப்பதாரர்களுக்கு மிகவும் தொலைதூர மாவட்டங்களை தேர்வு மையமாக ஒதுக்கி இருந்தது தேர்வு வாரியம்.
உதாரணமாக திண்டுக்கல்லை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பொதுவாக திண்டுக்கல், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் என தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து விண்ணப்பிப்பர். ஆனால் திண்டுக்கல் விண்ணப்பதாரர்களுக்கு சென்னை, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் பல தொலை தூர மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனால் பெண் விண்ணப்பதாரர்கள் பலரும் தேர்வே எழுதாவிட்டாலும் பரவாயில்லை என்கிற விரக்திக்கு தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மையங்கள் தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தானிலும் ஒதுக்கப்பட்டிருந்த அவலத்தைப் போல தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய மையங்களும் ஒதுக்கப்பட்டிருப்பது என்பது விண்ணப்பதாரர்களின் வேதனை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications