2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும் - டிடிவி தினகரன்
சென்னை: 2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்தே பாஜகவினர் கூட்டணி ஆட்சியே அமைக்கப்படும் என்று கூறி வருகின்றனர். ஆனால், கூட்டணி ஆட்சி இல்லை என்றே அதிமுகவினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், 2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும் என்று பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் அசுர வேகத்தில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். ஆனால், அமித்ஷா கூறியது குறித்து எடப்பாடி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. மேலும், முதலமைச்சர் வேட்பாளராக தான் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்பதை அமித் ஷா தெளிவுபடுத்தி உள்ளதாகவும், 2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றாலே அனைவருக்கும் தெரியும் 2014, 2019 இல் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போதும் கூட கூட்டணி கட்சிகளை எல்லாம் இணைத்தே அமைச்சரவையை அமைத்தார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றால் அது கூட்டணி அமைச்சரவை தான் என்பது எனது புரிதல்.
முதல்வர் வேட்பாளர் யார் என்று கூட்டணியினர் சேர்ந்து முடிவெடுப்பார்கள். 2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications