டெல்லியில் ரகசிய மேலிட சந்திப்புகளில் என்னதான் சொன்னார்கள்? சசிகலாவுடன் தினகரன் மந்திராலோசனை
சென்னை: டெல்லியில் மேலிடங்களுடன் தாம் நடத்திய ரகசிய சந்திப்புகளில் என்னதான் சொல்லப்பட்டது என்கிற விவரங்களை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விவரிக்க இருக்கிறார் தினகரன். கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் சசிகலாவை முதல் முறையாக சந்திக்கிறார் தினகரன்.
கொரோனா லாக்டவுன் காலத்துக்கு முன்னர் இருந்தே மத்திய பாஜக அரசை பட்டும் படாமலும்தான் விமர்சித்து வந்தார் தினகரன். அத்துடன் மக்களுடனான அரசியல் என்கிற போக்கையையே கொரோனா காலத்தில் தினகரன் தவிர்த்தும் விட்டார்.

புதுவை சந்திப்புகள்
புதுச்சேரி பண்ணை வீடுதான் கதி என கிடந்த தினகரன், திடீரென சில அரசியல் சந்திப்புகளை மேற்கொண்ட போதே பரபரப்பு தொடங்கிவிட்டது. இந்த நிலையில்தான் தனி விமானத்தில் டெல்லிக்கு சென்ற தினகரன் மேலிடத் தலைவர்கள் சிலரை ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார்.

டெல்லி பயணம் ஏன்?
இதுபற்றி அமமுக வட்டாரங்கள் கூறுகையில், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு குறித்து வழக்கறிஞர்கள் அழைத்ததன் பேரில் டெல்லி சென்றிருந்தார் தினகரன். பின்னர் சசிகலா முன்கூட்டியே விடுதலை தொடர்பாக சில தலைவர்களையும் சந்தித்து பேசினார்; சிலரிடம் தொலைபேசியிலும் பேசினார் என்கின்றனர்.

டெல்லியில் நடந்தது என்ன?
சசிகலாவைப் பொறுத்தவரையில் எப்படியும் ஆட்சி அதிகாரத்தை பெறாமல் ஓயமாட்டார். இதற்காகவே பெங்களூரு சிறைவாசத்தையும் எதிர்கொண்டிருக்கிறார் சசிகலா. அதேநேரத்தில் ஆட்சி அதிகாரத்தை பெற எத்தனை வழிகள் இருக்கிறதோ அத்தனையும் பெறுவதற்கும் தயங்காதவர்கள் சசிகலா தரப்பு. டெல்லி சந்திப்புகளிலும் தினகரன் இதனைத்தான் வெளிப்படுத்தினாராம்.

சசிகலாவை சந்திக்கும் தினகரன்
இதனிடையே டெல்லியில் நடந்த சந்திப்புகளில் என்னதான் பேசப்பட்டது? டெல்லி விதிக்கும் நிபந்தனைகள் என்ன? என்பது குறித்து சசிகலாவை சந்தித்து விரிவாக விளக்க இருக்கிறார் தினகரன். 6 மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் சசிகலாவை சந்திக்கப் போகிறார் தினகரன். ஏற்கனவே தினகரன் மீது சில விஷயங்களில் சசிகலாவுக்கு அதிருப்தி இருந்தாலும் அவரை முழுமையாகவும் நம்புகிறார்.

அதிமுகவில் விவாதம்
சசிகலா முன்கூட்டியே விடுதலையாவாரா? இல்லையா? என்பது உறுதியாகவில்லை. ஆனால் ஜனவரி மாதம் நிச்சயம் சசிகலா விடுதலை ஆகிறார். அதனால் இனிவரும் நாட்கள் சசிகலா -தினகரன் தரப்புகளை முன்வைத்து தீயாக விவாதங்கள் அனல்பறக்கும்; அதிமுகவின் ஒவ்வொரு முகாமும் அடுத்த நகர்வு என்ன என்பது குறித்து விடாது ஆலோசனைகளை தொடங்கியும் உள்ளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications