டெல்லியில் ரகசிய மேலிட சந்திப்புகளில் என்னதான் சொன்னார்கள்? சசிகலாவுடன் தினகரன் மந்திராலோசனை
சென்னை: டெல்லியில் மேலிடங்களுடன் தாம் நடத்திய ரகசிய சந்திப்புகளில் என்னதான் சொல்லப்பட்டது என்கிற விவரங்களை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விவரிக்க இருக்கிறார் தினகரன். கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் சசிகலாவை முதல் முறையாக சந்திக்கிறார் தினகரன்.
கொரோனா லாக்டவுன் காலத்துக்கு முன்னர் இருந்தே மத்திய பாஜக அரசை பட்டும் படாமலும்தான் விமர்சித்து வந்தார் தினகரன். அத்துடன் மக்களுடனான அரசியல் என்கிற போக்கையையே கொரோனா காலத்தில் தினகரன் தவிர்த்தும் விட்டார்.

புதுவை சந்திப்புகள்
புதுச்சேரி பண்ணை வீடுதான் கதி என கிடந்த தினகரன், திடீரென சில அரசியல் சந்திப்புகளை மேற்கொண்ட போதே பரபரப்பு தொடங்கிவிட்டது. இந்த நிலையில்தான் தனி விமானத்தில் டெல்லிக்கு சென்ற தினகரன் மேலிடத் தலைவர்கள் சிலரை ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார்.

டெல்லி பயணம் ஏன்?
இதுபற்றி அமமுக வட்டாரங்கள் கூறுகையில், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு குறித்து வழக்கறிஞர்கள் அழைத்ததன் பேரில் டெல்லி சென்றிருந்தார் தினகரன். பின்னர் சசிகலா முன்கூட்டியே விடுதலை தொடர்பாக சில தலைவர்களையும் சந்தித்து பேசினார்; சிலரிடம் தொலைபேசியிலும் பேசினார் என்கின்றனர்.

டெல்லியில் நடந்தது என்ன?
சசிகலாவைப் பொறுத்தவரையில் எப்படியும் ஆட்சி அதிகாரத்தை பெறாமல் ஓயமாட்டார். இதற்காகவே பெங்களூரு சிறைவாசத்தையும் எதிர்கொண்டிருக்கிறார் சசிகலா. அதேநேரத்தில் ஆட்சி அதிகாரத்தை பெற எத்தனை வழிகள் இருக்கிறதோ அத்தனையும் பெறுவதற்கும் தயங்காதவர்கள் சசிகலா தரப்பு. டெல்லி சந்திப்புகளிலும் தினகரன் இதனைத்தான் வெளிப்படுத்தினாராம்.

சசிகலாவை சந்திக்கும் தினகரன்
இதனிடையே டெல்லியில் நடந்த சந்திப்புகளில் என்னதான் பேசப்பட்டது? டெல்லி விதிக்கும் நிபந்தனைகள் என்ன? என்பது குறித்து சசிகலாவை சந்தித்து விரிவாக விளக்க இருக்கிறார் தினகரன். 6 மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் சசிகலாவை சந்திக்கப் போகிறார் தினகரன். ஏற்கனவே தினகரன் மீது சில விஷயங்களில் சசிகலாவுக்கு அதிருப்தி இருந்தாலும் அவரை முழுமையாகவும் நம்புகிறார்.

அதிமுகவில் விவாதம்
சசிகலா முன்கூட்டியே விடுதலையாவாரா? இல்லையா? என்பது உறுதியாகவில்லை. ஆனால் ஜனவரி மாதம் நிச்சயம் சசிகலா விடுதலை ஆகிறார். அதனால் இனிவரும் நாட்கள் சசிகலா -தினகரன் தரப்புகளை முன்வைத்து தீயாக விவாதங்கள் அனல்பறக்கும்; அதிமுகவின் ஒவ்வொரு முகாமும் அடுத்த நகர்வு என்ன என்பது குறித்து விடாது ஆலோசனைகளை தொடங்கியும் உள்ளன.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications