7 தமிழர் விடுதலைக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தினகரன் கூறியுள்ளதாவது:
ஏழு தமிழர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்' என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு மேலும் இவ்விவகாரத்தை இழுத்தடிக்கக் கூடாது.

ஏழு பேரை விடுதலை செய்யும் கோப்பை தன்னிடம் ஓராண்டிற்கும் மேலாக வைத்திருக்கும் ஆளுநர் உடனடியாக அதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்.
ஏழு பேரை விடுதலை செய்யும் கோப்பை தன்னிடம் ஓராண்டிற்கும் மேலாக வைத்திருக்கும் ஆளுநர் உடனடியாக அதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 7, 2020
பழனிசாமி அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் ஆளுநருக்கு உரிய அழுத்தம் கொடுத்து இவர்களின் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும்.
இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications