பிரசாந்த் கிஷோரெல்லாம் எங்களுக்கு தேவையில்லை.. மக்களே போதும்.. டிடிவி தினகரன் நம்பிக்கை
2 தொகுதிகளில் போட்டியிடுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
சென்னை: "பிரசாந்த் கிஷோரெல்லாம் எங்களுக்கு தேவையில்லை.. அமமுகவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது.. வரும் சட்டமன்ற தேர்தலில் 2 இடங்களில் கண்டிப்பாக போட்டியிடுவேன்.. அதற்குள் சசிகலா சிறையில் இருந்து வெளியாகி எங்களுக்காக பிரச்சாரம் செய்வார்" என்று டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகத்தை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திறந்து வைத்தார்... கழக கொடியையும் ஏற்றி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் அமமுக தலைமையில் ஒரு பெரிய கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளோம்... மக்கள் செல்வாக்கு உள்ள அமமுகவுக்கு பிரஷாந்த் கிஷோரெல்லாம் தேவையில்லை.
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆர்கேநகர் சட்டமன்றத் தொகுதியிலும், தென் மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியிலும் நான் போட்டியிடுவேன்.. சிறையில் இருந்து விடுதலையாகி சசிகலா தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள போகிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது அதற்கு முன்பாகவே சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்து விடுவார்... சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஆதரவாகவே அவர் இருப்பார்..
டிடிவி, என்பிஆர், என்ஆர்சி, சிஏஏ சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.. இந்நிலையில், சட்டமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால், அது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இதையடுத்து முதல்வர் ஆகும் ஆசை தனக்கு இல்லை என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு "அது அவருடைய முடிவு, அது குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை.. பெரியார், அண்ணாவைப்போல் நடிகர் ரஜினிகாந்துக்கும் ஆட்சி அதிகாரம் பற்றி கருத்து கூறும் சுதந்திரம் இருக்கிறது.. இது அவரது தனிப்பட்ட கருத்து" என்றார்!!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications