Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டம் ஆரம்பித்த விஜய்.. தவெக கல்வி விருது விழாவுக்கு வர்றதுக்குள்ள போன உத்தரவு! மலைத்த மாமல்லபுரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக்கழகம் சார்பில், கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற உள்ளது.. 2ம் கட்டமாக நடக்க உள்ள இந்த விழாவானது மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.. இந்த விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த 84 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு தவெக தலைவர் விஜய் பரிசு, ஊக்கத்தொகை, சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார்.. அத்துடன், தவெக குறித்த முக்கிய தகவல் ஒன்றும் இணையத்தில் கசிந்து, பரபரப்பை தந்து வருகிறது.

மாணவ, மாணவியரின் கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வருடந்தோறும் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

TVK Vijay Mamallapuram

கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த விருது வழங்கும் விழாவில, தமிழகம், புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய், விருதுகளையும், பரிசுகளையும் வழங்கி கவுரவித்து வருகிறார்.

இது 3வது வருடம்

அந்த வகையில், கல்வி விருது வழங்கும் விழா இப்போது 3வது வருடமாக நடக்கிறது.. முதற்கட்டமாக கடந்த 30ம் தேதி நடந்தது.. அப்போது இவ்விழாவில் தமிழகத்தில் 18 மாவட்டங்களை சேர்ந்த 88 தொகுதிகளில் 600 மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கி கவுரவித்திருந்தார் விஜய்..

ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, அரியலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கி, அவர்களுடன் விஜய் போட்டோ எடுத்துக் கொண்டார்

ஊக்கத்தொகை சான்றிதழ்

இந்நிலையில், தவெக சார்பில் 2ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும் இந்த விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த 84 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும், ஊக்கத்தொகை, சான்றிதழ் வழங்குகிறார் விஜய்.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," முதல் கட்டமாக 30-ஆம் தேதி பாராட்டு விழா வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், இரண்டாவது கட்ட விழா மாமல்லபுரம் 4.5 ஷாரட்டனில் நான்காம் தேதி நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை, விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளை சந்தித்து பரிசு வழங்கி பாராட்டுகிறார்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
.


பறந்த விஜய்யின் உத்தரவு

இதனிடையே, கல்வி விருது வழங்கும் விழா முடிந்ததுமே, பூத் கமிட்டி பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது, பூத் கமிட்டி கருத்தரங்கங்கள் மறுபடியும், மாவட்ட ரீதியாக, விஜய் தலைமையில் நடைபெற போகிறதாம்.. இதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லிதான், அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது..

விரைவாகப் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்து, மாவட்ட ரீதியாக பூத் கமிட்டி லிஸ்ட்டையும் தயாரிக்கவே, இப்படியொரு உத்தரவை பிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் முன்கூட்டியே பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவால், தவெக-வுக்குள் ஒரே பரபரப்பு நிலவி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+