வழக்கறிஞருக்கு படித்துவிட்டு, டாக்டர்னு பெயருக்கு முன் போடுவது ஏன்? TVK எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!
கோவை: வழக்கறிஞருக்கு படித்துவிட்டு, டாக்டர் என்று பெயருக்கு முன் போட்டு கொள்வது ஏன் என்ற கேள்விக்கு தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் விளக்கம் அளித்துள்ளார். ஜோதிடத்தில் முனைவர் பட்டம் பெற்றதால், டாக்டர் என்று பலரும் அழைக்க தொடங்கியதாக கூறிய கனிமொழி சந்தோஷ், அதுவே ஒரு கட்டத்தில் புனைப்பெயர் போல் மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் தவெக சார்பாக கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு 42,140 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் கனிமொழி சந்தோஷ். யூடியூபரான இவர், ஜோதிடம் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டு வந்தார். திடீரென தவெகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் இவரின் செயல்பாடுகள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து கனிமொழி சந்தோஷ் ஆலோசித்த வீடியோ வெளியாகியது. அதில் கனிமொழி சந்தோஷ் பெரிய ஷோபாவில் தனியாக அமர்ந்திருக்க, அரசு அதிகாரிகள் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் அரசு அதிகாரிகளை வீட்டிற்கு வரவழைத்து ஆலோசித்ததும் சர்ச்சையாகியது.
இதனால் தவெகவினரே நேரடியாக கனிமொழி சந்தோஷை சாட தொடங்கினர். இதன்பின் அவர் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன்படி, எம்எல்ஏ அலுவலகத்தில் பெயிண்டிங் மற்றும் இதர பணிகள் நடந்து வருகிறது. அதனால் என்னுடைய ஜோதிட அலுவலகத்தில் அரசு அதிகாரிகளை சந்தித்தேன். அரசு அதிகாரிகளுக்கு பிளாஸ்டிக் நாற்காலியை கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
இதனிடையே மற்றொரு சர்ச்சையிலும் கனிமொழி சந்தோஷ் சிக்கியுள்ளார். அவரின் தேர்தல் பிரமாண பத்திரத்தில் வழக்கறிஞருக்கு படித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சோசியல் மீடியா பக்கங்களில் டாக்டர் கனிமொழி சந்தோஷ் என்று இருக்கிறது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் கனிமொழி சந்தோஷிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கனிமொழி சந்தோஷ், நான் ஜோதிடத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளோம். என்னுடைய ஆர்வம் ஜோதிடம் என்பதால், அதில் முனைவர் பட்டம் பெற்றேன். ஆனால் கல்வி தகுதி வழக்கறிஞர் தான். இதன் காரணமாக மக்கள் என்னை டாக்டர் என்று அழைக்க தொடங்கிவிட்டார்கள். ஒரு புனைப்பெயர் போல் மாறிவிட்டது.
இன்னொரு விஷயம் உடல்நலம் தொடர்பாக அதிகம் பேசி இருக்கிறேன். அந்த வீடியோக்களை அடிப்படையாக வைத்து கொண்டு என்னை டாக்டர் என்று சொல்லி சிலர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்கள். ஆனால் நான் வழக்கறிஞர் மட்டும்தான் என்று தெரிவித்துள்ளார். தவெக எம்எல்ஏ-க்கள் பலரும் தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி விளக்கம் அளிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பது மக்களிடையே விமர்சனத்தை பெற்றுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications