சேப்பாக்கம் மைதானத்தில் விசில் அடித்தால்! சித்தரஞ்சன் சாலைவாசிகளுக்கு தூக்கம் கட்!நாஞ்சில் சம்பத்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விசில் சப்தம் கேட்டால் சித்தரஞ்சன் சாலையில் இருப்பவர்களுக்கு தூக்கம் போய்விடுகிறது என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் "விசில்" சத்தம் கேட்டால் சித்தரஞ்சன் சாலையில் இருப்பவர்களுக்கு தூக்கம் போய்விடுகிறது..! சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும்..! விசிலின் ஓசையில் விஜய்யின் ஆட்சி நடக்கும்! என தெரிவித்துள்ளார்.

nanjil Sampath tvk Vijay

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.

எத்தனை கட்சிகள் களத்தில்..!

இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் கொண்ட 4 முனை போட்டி நிலவும். வரும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

தேர்தல் வியூகங்கள்

அதற்கேற்ப தேர்தல் வியூகங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் புதியதாக கட்சி தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்கி நடத்தி வருகிறது.

விசில் சின்னம்

மேலும் அக்கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த சின்னத்தை தவெகவினர் மக்களிடம் பிரபலப்படுத்தி வருகிறார்கள். இதற்காக விசில்களை பொதுமக்கள் கூடும் இடங்களில் வழங்கி வருகிறார்கள்.

ஆரவாரம் செய்யும் தவெக

விஜய் முதல் கட்சி நிர்வாகிகள் வரை விசில் அடித்து ஆரவாரம் செய்து வருகிறார்கள். விசில் சின்னம் எளிதான சின்னம், மக்களிடையே விரைந்து பிரபலப்படுத்திவிடலாம். மகிழ்ச்சி வந்தாலே விசில் சப்தம்தான் பறக்கும் என்பதால் இந்த சின்னத்தை யாரும் மறக்கவே முடியாது.

சென்னை சேப்பாக்கம்

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் முதல்முறையாக ரசிகர்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் மனதிற்கு நெருக்கமானவர்கள் பேசும் போது, விளையாட்டு போட்டிகளில் வெல்லும் போது எல்லாம் விசில் சப்தம் விண்ணை எட்டும்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

அப்படி இருக்கும் நிலையில் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு செல்ல முதல் முறையாக தடை செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஐடி விங் கண்டனம்

தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிப்பிற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இத்தனை ஆண்டுகளாக இல்லாத புது விதியாக, இப்போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள். ஏன்?

nanjil Sampath tvk Vijay

விசில் சப்தம் கேட்டால் ஜுரம் வந்துடுது!

சேப்பாக்கத்தில் விசில் சத்தம் கேட்டாலே சிலருக்கு "ஜூரம்" வந்துவிடுகிறதோ? விளையாட்டு மைதானம் என்பது மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடம். அங்கே போய் விசிலுக்குத் தடை விதிப்பது என்பது, மக்களின் கொண்டாட்ட உரிமையைப் பறிக்கும் செயல்.

விசிலை தடுக்கலாம்

மைதானத்திற்குள் வரும் விசிலைத் தடுத்துவிடலாம், ஆனால் மக்களின் மனதிற்குள் ஒலிக்கும் மாற்றத்திற்கான விசிலை யாரால் தடுக்க முடியும்? சின்ன சின்ன விஷயங்களில் கூட இப்படி கெடுபிடி காட்டும் இந்த நிர்வாக முறையை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. மக்களின் கொண்டாட்டங்களைச் சீண்டும் இத்தகைய "விசித்திர" விதிகள், உண்மையில் ஆட்சியாளர்களின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. நீங்கள் பிடுங்குவது விசிலை அல்ல, ரசிகர்களின் உரிமையை!

வெற்றி விசில் சப்தம்

நாளை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் மக்கள் போடப்போகும் "வெற்றி விசில்" சத்தத்தில், இப்போதைய ஆட்சியாளர்களின் தூக்கம் நிச்சயம் கலைந்து போகும்! இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+