என்னை மன்னித்துவிடுங்கள்.. பட்டென கரூர் குடும்பங்கள்.. காலில் விழுந்து கலங்கிய விஜய்? பின்னணி!
சென்னை: கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் பலியான நபர்களின் குடும்பத்தினரை இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன், இந்த பேரிழப்பைத் தன்னால் ஈடு செய்யவே முடியாது என்று வருத்தம் தெரிவித்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உங்கள் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன்," என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் உறுதியளித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சந்திப்பு
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று மகாபலிபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தனி சந்திப்பை நடத்தினார். கட்சி வட்டாரங்களின்படி, மகாபலிபுரத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, ஊடகங்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தச் சந்திப்பின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.
அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK), இந்தச் சந்திப்புக்காக ஒரு ரிசார்ட்டில் 50 அறைகளை முன்பதிவு செய்திருந்தது. இதன் மூலம் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து தனது இரங்கலைத் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 37 குடும்பங்கள் இந்தச் சந்திப்புக்காக அழைத்து வரப்பட்டிருந்தன. விஜய், ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். அவர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தனியாக சந்தித்த விஜய்
விஜய் தனிப்பட்ட முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து, விபத்தில் பலியான குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்து கலங்கியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்ததற்காக அவர்களிடம் வருத்தம் தெரிவித்த அவர், தன்னை குடும்பத்தில் ஒருவராகக் கருதுமாறு கேட்டுக்கொண்டார். கண்டிப்பாக உங்களை கரூரிலும் வந்து சந்திப்பேன் என்று கூறினார். மேலும், அவர்களின் அனைத்து தேவைகளையும் தானே கவனித்துக்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கல்விக்கான உதவி உட்பட நிதி உதவியை வழங்குவதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி விஜய்
நடிகர்-அரசியல்வாதி விஜய் துயரமடைந்த குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் சந்திக்க வசதியாக, தமிழக வெற்றிக் கழகம் கட்சி 50 ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்துள்ளது. பேருந்து மூலம் அவர்கள் விழா இடத்திற்கு அழைத்து வரப்படுவார்கள். எனினும், குடும்பத்தினரை கரூர் சென்று சந்திக்காமல், பயணம் மற்றும் தங்குமிட ஏற்பாடுகளைச் செய்ததற்காக விஜயை சிலர் விமர்சித்துள்ளனர். இது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், கரூரில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அதிகாரிகளிடம் அனுமதி கிடைக்காததால் இந்த ஏற்பாடு அவசியமானது என்று கட்சி வாதம் வைத்துள்ளது. ஆனால் தவெக அப்படி எதுவும் கோரிக்கை வைக்கவில்லை என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது, காயமடைந்தவர்கள் மகாபலிபுரம் சென்ற பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற வில்லை என்று கூறப்படுகிறது.
காலில் விழுந்த விஜய்
கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் பலியான நபர்களின் குடும்பத்தினரை இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன், இந்த பேரிழப்பைத் தன்னால் ஈடு செய்யவே முடியாது என்று வருத்தம் தெரிவித்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உங்களுக்கு நடந்த துயரங்களுக்கு மன்னிப்பு கேட்கிறேன்.. உங்களுடன் எப்போதும் உடன் இருப்பேன் என்று விஜய் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications