Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயின் தவறே கரூர் சம்பவத்திற்கு காரணம்! CBI விசாரணையை எதிர்த்த தமிழக அரசு! கோர்ட்டில் சொன்னது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றும் உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவை திரும்பப் பெற தமிழக அரசு கோரியுள்ளது. இந்த மனு தொடர்பான முக்கியமான பல விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி நடிகர் விஜய் போலீஸ் அதிகாரிகளின் அறிவுரையை கேட்காமல் போனதாக கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

சிபிஐ தலையீடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போலீஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவே இந்த வழக்கை விசாரிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது

TVK Vijay

சிபிஐ விசாரணை கோரிய மனுதாரர் பாஜகக்காரர்

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், சிபிஐ விசாரணை கோரிய மனுதாரர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால், அவரது கோரிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றது மாநில அரசு. பதிலளிக்க வாய்ப்பளிக்காமல் நீதிமன்றம் இறுதித் தன்மை கொண்ட இடைக்கால உத்தரவை பிறப்பித்ததையும் தமிழக அரசு கேள்வி எழுப்பியது.

கூட்ட நெரிசலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுமே காரணம்; காவல்துறையின் அறிவுறுத்தல்களை மீறி அனுமதிக்கப்பட்ட பாதையில் இருந்து வேண்டுமென்றே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்கள் மாறினர் என தமிழக அரசு குற்றம் சாட்டியது. இந்தச் சம்பவம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது, அரசியல் பின்னணி கொண்டது என நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு அக்டோபர் 13 அன்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் அசாதாரணமானது

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் அசாதாரணமானது, நீதிமன்றம் திருப்தியடையும் பட்சத்தில் மிக அரிதாக, எச்சரிக்கையுடன் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என தமிழக அரசு பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி மனுதாக்கல் செய்துள்ளது.

புலனாய்வுத் துறையில் நீதித்துறை தலையீடு குறைவாக இருக்க வேண்டும் என்பதையும், சார்புநிலை, தீய நோக்கம் அல்லது வெளிப்படையான நீதி தவறியதற்கான காரணங்கள் தெளிவாக நிறுவப்படும்போது மட்டுமே இது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது . ஆனால் அதை மீறி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளது.

தவெக வைக்கும் குற்றச்சாட்டுகளை சிபிஐ தலையீட்டிற்குப் போதுமான அடிப்படையாக ஏற்றுக்கொள்வது, மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசியல் ரீதியாகத் தவறாகப் பயன்படுத்துவதற்கான வாயில்களைத் திறந்துவிட்டு, மாநில சுயாட்சியையும், அரசியலமைப்பு அதிகார சமநிலையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்," என்றும் பிரமாணப் பத்திரத்தில் தமிழக அரசு சுட்டிக்காட்டியது.

"இந்த இடைக்கால உத்தரவு ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இதன் மூலம், ஒவ்வொரு அரசியல் உணர்வுப்பூர்வமான வழக்கையும் மாநில அதிகார வரம்பிலிருந்து நீக்க முற்படலாம். இது கூட்டாட்சி கட்டமைப்புக்கும், அரசியலமைப்பு அமர்வு வலியுறுத்திய நீதித்துறை சுயக்கட்டுப்பாட்டுக்கும் எதிரானது," என்றும் அது எச்சரித்தது.

வழக்கு பின்னணி

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இந்த உத்தரவு மாநில சுயாட்சியைப் பலவீனப்படுத்துவதாகவும், ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குவதாகவும் தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டு உள்ளது.

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கூறி, தமிழ்நாடு காவல்துறையின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வு குழுவிடம் (எஸ்ஐடி) இருந்து வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் அக்டோபர் 13 அன்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+