காஞ்சிபுரத்தில் அண்ணா பற்றி பேசினால் போதுமா விஜய்.. அண்ணாவின் புகைப்படம் எங்கே? கோடீஸ்வரன் கேள்வி
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து அண்ணாவின் புகழை பேசிய விஜய், அந்த அரங்கில் அண்ணாவின் புகைப்படத்தை வைக்காதது ஏன் என்று பத்திரிகையாளர் கோடீஸ்வரன் கேள்வி எழுப்பி இருக்கிறார். உள்ளரங்கு கூட்டத்தில் கூட தவெக தொண்டர்களுடன் விஜய் ஒரு செல்ஃபி எடுக்காமல் சென்றதையும் விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் பாஸ் கொடுக்கப்பட்டு, க்யூஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் விஜய் பேசுகையில், அறிஞர் அண்ணா பிறந்த மாவட்டம் தான் காஞ்சிபுரம். தன் வழிக்காட்டி என்பதால் அறிஞர் அண்ணாவை தாம் தொடங்கிய கட்சியின் கொடியில் வைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அண்ணா ஆரம்பித்த கட்சியை தற்போது கைக்குள் வைத்திருப்பவர்கள் என்ன எல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அது மக்களுக்கு நன்றாக தெரியும். தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் திமுகவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. காஞ்சிபுரத்துக்கும் எனக்கும் இயல்பாகவே தொடர்பு உள்ளது. தவெக முதல் அரசியல் பயணம் தொடங்கியது பரந்தூரில் இருந்துதான். இன்று மிகுந்த மனவேதனைக்கு பிறகும் நான் மக்களை சந்திக்கும் இடமும் காஞ்சிபுரம் தான் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக பத்திரிகையாளர் கோடீஸ்வரன் பேசுகையில், காஞ்சிபுரத்தில் இருந்து அண்ணாவை பற்றி பேசும் விஜய், அண்ணாவுக்கு ஒரு போஸ்டர் வைக்காதது ஏன்? ஒரு பேனர் வைப்பதற்கு எவ்வளவு நேரமாகிவிடும். விஜய்க்கு அவ்வளவுதான் அரசியல் தெரியும். அதேபோல் விஜய்யால் திமுகவை மட்டுமே எதிர்க்க முடியும். பாஜகவை எதிர்க்க முடியாது.
ஏற்கனவே கரூர் வழக்கு சிபிஐ வசம் உள்ளது. இன்று தமிழிசை உள்ளிட்டோர் விஜய்யை கூட்டணிக்கு வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அதிமுகவையும் விஜய் விமர்சிக்க தொடங்கினால், அதனை தவெகவால் சமாளிக்க முடியாது. விஜய் எடுத்துள்ள ரூட் சரிதான். அதிமுகவை கடுமையாக விமர்சித்தால், அந்தக் கட்சியின் நிறுவனரான எம்ஜிஆர்ரை வைத்து அதிமுக பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து.. விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாராம்!












Click it and Unblock the Notifications