புரட்சி பாரதம் கட்சியுடன் பேசிய விஜய்.. சிரித்துக்கொண்டே தவெக ஆபரை நிராகரித்த பூவை ஜெகன்மூர்த்தி!
சென்னை: தவெக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியை கொண்டு வரும் நோக்கில் பூவை ஜெகன்மூர்த்தியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிய வருகிறது. அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறி பூவை ஜெகன்மூர்த்தி தவெகவின் ஆஃப்ரை நிராகரித்திருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணியை அமைத்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனித்தே களமிறங்குவதாக அறிவித்துவிட்டார். இதனால் தவெக தலைமையில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே செங்கோட்டையன் தரப்பில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்து கூட்டணி அமையும் என்று கூறி வருகிறார். ஆனால் இதுவரை இரு தரப்பும் விஜய்யுடன் ஒருமுறை கூட சந்திப்பு நடத்தவில்லை.
அதேபோல் தவெக கூட்டணியில் ஒரு பட்டியலின கட்சியை கொண்டு வர வேண்டும் என்று விஜய் விரும்பி இருக்கிறார். ஏனென்றால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் மட்டும் கூட்டணி அமைத்தால், அது விஜய் மீது ஒரு வகையான சமூக சாயம் பூசப்படும் என்று கணக்கு போட்டுள்ளனர். இதனால் தவெக நிர்வாகி அருண்ராஜ் மூலமாக புரட்சி பாரதம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அப்போது அருண்ராஜ் பேச்சுவார்த்தையை முடித்த போதே, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, அதிமுக கூட்டணியில் ஏற்கனவே எங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இதனால் மேலும் எதுவும் பேச முடியாமல் அருண்ராஜ் அங்கிருந்து புறப்பட்டு வந்ததாக தெரிய வந்துள்ளது.
இதனால் தவெக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்று அக்கட்சியின் தொண்டர்கள் பேசத் தொடங்கி இருக்கின்றனர். அதேபோல் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் முதன்மை சாய்ஸாக என்டிஏ கூட்டணியே இருக்கிறது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே முட்டுக்கட்டையாக இருக்கிறார். ஒருவேளை எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டால், சீமான் கதி தான் விஜய்க்கும் வரும் என்று பார்க்கப்படுகிறது.
-
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க












Click it and Unblock the Notifications