Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுக்குத்தான் டேபிளை உடைச்சீங்களா விஜய்! அடுத்தடுத்து சட்ட ரீதியாக தோல்வி.. சோதனை மேல் சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவைத் தாண்டி அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, கடந்த ஒரு சில காலமாக சட்ட ரீதியாக மிகச் சோதனையான காலமாக அமைந்துள்ளது. பழைய வருமான வரி வழக்கு, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சிக்கல் என அடுத்தடுத்து அவருக்கு நீதிமன்றத்தில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள், அவருக்கு தேர்தல் நேரத்தில் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகின்றன.

TVK Vijay s Legal Failures A Week of Setbacks Tests Kollywood Star-Turned-Politician

'ஜனநாயகன்' பட விவகாரம்: பின்வாங்கிய தயாரிப்பாளர்கள்

விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சட்டப் போராட்டம் இன்று ஒரு முடிவுக்கு வந்தது. சென்சார் போர்டு இந்தப் படத்தை 'மறுஆய்வுக் குழு' (Revising Committee) விசாரணைக்கு அனுப்பியதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருந்தது.

ஆரம்பத்தில் ஒரு நீதிபதி சாதகமான தீர்ப்பு வழங்கினாலும், அதை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, "தயாரிப்பாளர்கள் இவ்வளவு வேகமாக நீதிமன்றத்தை வற்புறுத்தக் கூடாது" என்று கண்டனம் தெரிவித்து, முந்தைய உத்தரவுக்குத் தடை விதித்தது. விஜய் தரப்பிற்கு இது மிகப்பெரிய தோல்வியாக மாறியது.

இதையடுத்து, இன்று (பிப்ரவரி 10) காலையில் அந்த வழக்கை தயாரிப்பாளர்கள் திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதன் மூலம், நீதிமன்றத்தின் மூலம் தீர்வுகாணும் முயற்சியை விட்டுவிட்டு, முறைப்படி சென்சார் போர்டு சொல்லும் வழிமுறைக்கே அவர்கள் சம்மதித்துள்ளனர். இது பட வெளியீட்டில் சிறிது தாமதத்தை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. தேவையில்லாமல் பெஞ்சை உடைத்து, சுவற்றின் மேல் கால் வைத்து, பல்டி அடித்தது எல்லாம் வேஸ்ட்!

₹1.5 கோடி அபராதம்: வருமான வரி வழக்கில் பின்னடைவு

இதற்கிடையில், கடந்த பிப்ரவரி 6-ம் தேதி விஜய்க்கு இன்னொரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 2015-ம் ஆண்டு 'புலி' படத்தின்போது எடுக்கப்பட்ட வருமான வரி சோதனையில், அவர் ₹15 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி வருமான வரித் துறை ₹1.5 கோடி அபராதம் விதித்தது.

"இந்த அபராதம் விதிக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டது (Time-barred), அதனால் இதை ரத்து செய்ய வேண்டும்" என்று விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார். அபராதம் விதிக்கப்பட்ட காலம் சட்டப்படி சரியானதுதான் என்று நீதிபதி கூறிவிட்டார். இதனால், அந்தப் பெரிய தொகையைச் செலுத்த வேண்டிய கட்டாயம் இப்போது விஜய்க்கு ஏற்பட்டுள்ளது.

சத்தமின்றி அபராதம் கட்டி இருந்தால் விஜயின் பெயர் கெட்டு இருக்காது.. அவரும் தூய சக்தியாக தொடர்ந்திருப்ப்பார்.. இப்போ பாருங்க.. எதிர்க்கட்சிகளுக்கு அவரே பாயிண்ட் எடுத்து கொடுத்துவிட்டார்.

கரூரில் நடந்த சம்பவம்: விடாமல் துரத்தும் சிபிஐ (CBI)

இது தவிர, கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடந்த அரசியல் பயணத்தின்போது ஏற்பட்ட நெரிசல் தொடர்பான புகாரும் இன்னும் ஓயவில்லை. இது தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் இருந்து, சிபிஐ அதிகாரிகள் தவெக நிர்வாகிகளிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயிடம் நேரடியாகவும் விசாரணை செய்து நெருக்கடி போட்டுள்ளனர்.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்ன?

விஜய் இப்போது ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், ஒரு கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். சினிமா சார்ந்த சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும், வருமான வரி விவகாரங்களும், பொதுக்கூட்டப் புகார்களும் அவர் மீது அரசியல் ரீதியான விமர்சனங்களை எழுப்பத் தொடங்கியுள்ளன. தேர்தல் நேரத்தில் முன்னதாக, இத்தகைய சட்டப் போராட்டங்களை அவர் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதுதான் இப்போது தமிழக அரசியலில் முக்கியப் பேச்சாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+