சென்னையில் 33% வாக்கை தவெக கைப்பற்றும்.. அதிமுக டெபாசிட் வாங்காது.. சொல்கிறார் பத்திரிகையாளர் இதயா!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து 5 நாட்களாகிவிட்டது. மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த முறை பதிவான வாக்குகளை விடவும், இம்முறை கூடுதலாக சுமார் 23 லட்சம் வாக்குகள் வரை பதிவாகி இருக்கிறது. இதனால் விஜய்க்கு ஆதரவான அலை வீசுவதாக பலரும் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் இதயா அளித்துள்ள நேர்காணலில், இந்த தேர்தலை போல் எந்தத் தேர்தலையும் பார்த்ததே இல்லை என்று ஒவ்வொரு ஆண்டும் சொல்வார்கள். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போதும் சொன்னார்கள். அதிமுக - தேமுதிக கூட்டணி அமைத்த போதும் பேசினார்கள். மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட்ட போதும் பேசினர்கள்.

கமல் கட்சி தொடங்கிய போதும் சொன்னார்கள். அப்படிதான் இம்முறை கணிக்க முடியாத தேர்தல் என்று கூறுகிறார்கள். விஜய்க்கு 25% வாக்குகள் கிடைக்கும் என்று சொன்ன போது கிண்டல் செய்தார்கள். ஆனால் இன்று பலரும் விஜய்க்கு 20% வாக்குகள் வரை கொடுக்க தொடங்கிவிட்டார்கள். தற்போது சென்னை மண்டலத்தில் 33% வாக்குகளை விஜய் பெறுவார். திமுக 40% வாக்குகளையும், அதிமுக சில தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்.
சென்னையில் ஒரு சில தொகுதிகளில் தவெக வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. சட்டசபையில் தவெக உறுப்பினர் நிச்சயம் இருப்பார். தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால், 38% வாக்குகளை எடுக்க வேண்டும். சென்னையை தவிர்த்து வேறு எந்த மாவட்டத்திலும் தவெக 30% வாக்குகளை தாண்டாது.
எனக்கு தெரிந்தவரை செங்கோட்டையன் வெல்ல வாய்ப்புள்ளது. காரைக்குடியில் பிரபுவுக்கு ஒரு சான்ஸ் இருக்கிறது. ஆனால் உறுதியாக சொல்ல முடியாது. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்க்கு எளிதாக இருக்காது. பெரம்பூரில் விஜய் வென்றுவிடுவார். திருச்சி கிழக்கில் விஜய் தோற்கவும் வாய்ப்புள்ளது. விஜய் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர். சென்னையில் திரையரங்கும் செல்வோரின் எண்ணிக்கை அதிகம்.
பல குடும்பங்களில் குழந்தைகள் விஜய்க்கு வாக்கு சேகரித்துள்ளனர். அதன் தாக்கம் களத்தில் கொஞ்சம் நடந்திருக்கிறது. விஜய் பக்கம் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் ஆளுமை குறைவாக இருக்கிறது. ஜெயலலிதாவிடம் இருந்த கரீஷ்மா எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. அதனால் திமுகவை எதிர்க்க வலுவான நபராக விஜய்யை பலரும் பார்க்கிறார்கள்.
அதிமுகவுக்கு சாதகமான வாக்குகள் மட்டுமல்லாமல், சிறுபான்மை சமூக மக்களும் விஜய்க்கு வாக்களித்துள்ளனர். பாஜக வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டால், திமுக மட்டுமே சாய்ஸாக இருந்தது. ஆனல இப்போது விஜய் ஒரு முக்கிய சாய்ஸாக இருக்கிறார். விஜய் கெஞ்சியும் கூட யாரும் கூட்டணிக்கு வரவில்லை. அதற்கு விஜய் களத்தில் செயல்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications