இரட்டை இலை சின்னம் எங்களுக்கே வேண்டும்.. தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் திடீர் கடிதம்.. அப்போ எடப்பாடி
சென்னை: நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளால், இரட்டை இலைச் சின்னம் பெறுவதை இழக்க நேரிடும் என அச்சப்படுகிறோம். எனவே தேர்தல் ஆணையம் தலையிட்டு, தங்கள் தரப்புக்கு இரட்டை இலை ஒதுக்க வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் போட்டி ஏற்பட்டது. இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு இருந்ததால், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றினார். ஓ பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

அதிமுகவில் இருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், அதிமுக கட்சியும், சின்னமும் எடப்பாடி வசம் சென்றது உறுதியானது. எனினும் அதிமுக பொதுச்செயலளர் விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்: இந்த நிலையில், இந்த வழக்கை காரணம் காட்டி இரட்டை இலை சின்னத்தை தனக்கே ஒதுக்க வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஓ பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- வழக்கு நிலுவையில் உள்ளதால் தமது கட்சி வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை உள்ளது.
தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவிலை: எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வானதை தேர்தல் ஆணையமோ நீதிமன்றமோ இதுவரை அங்கீகரிக்கவில்லை. சிவில் நீதிமன்றங்களில் அதிமுக தொடர்பான வழக்குகளில் இதுவரை இறுதி தீர்ப்பு வழங்கவில்லை. சட்டவிரோதமாக கூட்டிய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி பொதுச்செயலாளாராக அறிவித்துக் கொண்டார்.
எனக்கு அதிகாரம் உள்ளது: 2022 ஜூலை 11-ல் சட்ட விரோதமாக அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி பழனிசாமி குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். 2022 ஜூன் 28ல் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகிவிட்டார். 2028 டிசம்பர் 28 வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர்வதற்கு எனக்கு அதிகாரம் உள்ளது.
எனவே வேட்பாளர்களுக்கு ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கு வழங்க வேண்டும். இரட்டை இலை சின்ன விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையத்த்திற்கு எழுதிய கடிதத்தில் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணியா?: லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட ஓ பன்னீர் செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளது. பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் தரப்பிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் எனக் கூறி வரும் ஓ பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு சின்னம் கேட்டு கடிதம் எழுதியிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications