Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரட்டை இலை சின்னம் எங்களுக்கே வேண்டும்.. தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் திடீர் கடிதம்.. அப்போ எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளால், இரட்டை இலைச் சின்னம் பெறுவதை இழக்க நேரிடும் என அச்சப்படுகிறோம். எனவே தேர்தல் ஆணையம் தலையிட்டு, தங்கள் தரப்புக்கு இரட்டை இலை ஒதுக்க வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் போட்டி ஏற்பட்டது. இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு இருந்ததால், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றினார். ஓ பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

Two leaf symbol should be assigned to their party O Panner selvam writes Election Commission


அதிமுகவில் இருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், அதிமுக கட்சியும், சின்னமும் எடப்பாடி வசம் சென்றது உறுதியானது. எனினும் அதிமுக பொதுச்செயலளர் விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்: இந்த நிலையில், இந்த வழக்கை காரணம் காட்டி இரட்டை இலை சின்னத்தை தனக்கே ஒதுக்க வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஓ பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- வழக்கு நிலுவையில் உள்ளதால் தமது கட்சி வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை உள்ளது.

தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவிலை: எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வானதை தேர்தல் ஆணையமோ நீதிமன்றமோ இதுவரை அங்கீகரிக்கவில்லை. சிவில் நீதிமன்றங்களில் அதிமுக தொடர்பான வழக்குகளில் இதுவரை இறுதி தீர்ப்பு வழங்கவில்லை. சட்டவிரோதமாக கூட்டிய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி பொதுச்செயலாளாராக அறிவித்துக் கொண்டார்.

எனக்கு அதிகாரம் உள்ளது: 2022 ஜூலை 11-ல் சட்ட விரோதமாக அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி பழனிசாமி குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். 2022 ஜூன் 28ல் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகிவிட்டார். 2028 டிசம்பர் 28 வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர்வதற்கு எனக்கு அதிகாரம் உள்ளது.

எனவே வேட்பாளர்களுக்கு ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கு வழங்க வேண்டும். இரட்டை இலை சின்ன விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையத்த்திற்கு எழுதிய கடிதத்தில் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணியா?: லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட ஓ பன்னீர் செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளது. பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் தரப்பிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் எனக் கூறி வரும் ஓ பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு சின்னம் கேட்டு கடிதம் எழுதியிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+