சென்னை மனநலம் குன்றிய மாணவி பாலியல் பலாத்காரம்.. மேலும் 2 பேர் கைது.. இன்னும் சிலரை பிடிக்க தீவிரம்!
சென்னை: சென்னையில் மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய மாணவி ஒருவர் கல்லூரியில் பயின்று வருகிறார். 10 ஆம் வகுப்பு வரை மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளியில் படித்த அந்த மாணவி, பிளஸ் 2 தேர்வை தனித் தேர்வராக எழுதி தேர்ச்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து, அண்ணா சாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், அந்த மாணவிக்கு திடீரென கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவரது தந்தை விசாரித்தபோது, அந்த மாணவியை, தனது தோழி மூலம் அறிமுகமான ஆண் நண்பர்கள் அடிக்கடி வெளியே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. சென்னையில் சில லாட்ஜ்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதையடுத்து, மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையை தொடர்ந்து 2 பேர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி மாணவன் சுரேஷ் மற்றும் பள்ளி மாணவன் ஒருவர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிலரும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். கல்லூரி மாணவன் சுரேஷ் மற்றும் பள்ளி மாணவன் என 2 பேரை கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்ய தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கல்லூரி மாணவர் மணி ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications