உதயநிதி ஸ்டாலினால்.. தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்! சரியான நேரத்தில் அதிரடி மூவ்
சென்னை: உலக செவித்திறன் மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கான சர்வதேச போட்டி பிரேசில் நாட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையம் நிதியுதவி செய்ய மறுத்திருந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக வீரர்களுக்கு, மாநில அரசு சார்பில் நிதி வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
ஜனவரி 14 முதல் 20 வரை பிரேசில் நாடடில், சாவ் பாலோவில் உலக செவித்திறன் மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கான சர்வதேச போட்டி நடைபெறுகிறது. 14-18 வயதுக்குட்பட்ட பிரிவில் தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து மற்றும் நீச்சல் ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்க நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் இருக்கும் நிலையில், மத்திய அரசு இவர்களுக்கான நிதியை வழங்க முன்வரவில்லை.

அதாவது, "இந்த விளைாயட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் திட்டம் அரசாங்கத்தின் செலவில் அங்கீகரிக்கப்படவில்லை" என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் கூறிவிட்டது. இதனால் இளைஞர்கள் இதில் பங்கேற்க அனுமதியும் வழங்கப்படவில்லை. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் செவித்திறன் மாற்றுத் திறனாளிகளான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வர்ஷினி ஆகியோர் தேசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு தடகள போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளனர்.
பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாவுலோ (Sao Paulo)-வில் ஜனவரி 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ள முதலாவது உலக செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான இளைஞர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுத்து, இந்திய விளையாட்டு ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி 5 பேரின் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கும்படி உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, இந்த சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக ஐந்து பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் தமிழக அரசால் வழங்கப்படும் என இளைஞர் நலன் மட்டும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருப்பதாக குறிப்பிட்டார்.
எனவே ஐந்து பேரும் பிரேசில் சென்று போட்டியில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றும் உத்தரவாதம் அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications