குன்றக்குடி அடிகளாரின் விபூதியை பெரியார் பூசினாரா? உதயநிதி பேச்சு- பெரியாரிஸ்டுகள் சொல்லும் வரலாறு!
சென்னை: திராவிட இயக்கத்தின் ஆக்கப் புள்ளியாக இருந்த நீதிக்கட்சியின் ஆட்சியின் போது தான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை நெற்றி நிறைய பூசி கொண்டவர் தான் தந்தை பெரியார்" என்று தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிட இயக்கத்தின் ஆக்கப் புள்ளியாக இருந்த நீதிக்கட்சியின் ஆட்சியின் போது தான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை நெற்றி நிறைய பூசி கொண்டவர் தான் தந்தை பெரியார் அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழங்கினார்கள். ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் தான் கருணாநிதி. இப்படி நம்முடைய தலைவர்கள் வழியில் முதலமைச்சர் அறநிலையத்துறையின் சார்பாக ஏராளமான

பெரியாரிஸ்டுகள் எதிர்ப்பு: ஆனால் " குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை நெற்றி நிறைய பூசி கொண்டவர் தான் தந்தை பெரியார் அவர்கள்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது உண்மைக்குப் புறம்பானது என கொந்தளிக்கின்றனர் பெரியாரிஸ்டுகள். சென்னை தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் ஓ.சுந்தரம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், தந்தை பெரியாருக்கு குன்றக்குடி அடிகளார் விபூதி கொடுக்கவுமில்லை; அதைப் பெற்றுக் கொண்டு நெற்றி நிறைய பெரியார் பூசிக் கொள்ளவும் இல்லை! இப்படித் தவறான தகவலை உதயநிதி பேசி, அது பதிவாகிறபோது நமது கொள்கை எதிரிகள் இதனை ஆதாரமாக்கி விமர்சிக்கக் கூடும் என்பதால் உண்மையை எடுத்துச் சொல்கின்றோம் என விவரித்திருந்தார்.

கொளத்தூர் மணி சொல்வது என்ன?: இது தொடர்பாக நமது ஒன் இந்தியா தமிழ் சார்பாக, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணியைத் தொடர்பு கொண்டு கேட்ட போது தெரிவித்ததாவது: பொதுவாக ஆதீனங்களுக்கு யார் சென்றாலும் அங்குள்ள கட்டளைத்தம்பிரான்கள் திருநீறு வைத்து வரவேற்பது வழக்கம்தான். அப்படித்தான் தந்தை பெரியார் குன்றக்குடி அடிகளாரை சந்திக்கச் சென்ற போது கட்டளைத்தம்பிரான் தந்தை பெரியாருக்கு திருநீறு வைத்துவிட்டார். ஆனால் தந்தை பெரியார் அப்போது எதுவும் சொல்லாமல் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார்.. அந்த தண்ணீரை குடித்துவிட்டு அப்படியே முகம் கழுவி விபூதியையும் அழித்துவிட்டார் என்பதுதான் வரலாறு. குன்றக்குடி அடிகளார், தந்தை பெரியாருக்கு விபூதி தரவும் இல்லை; அதை தந்தை பெரியார் வாங்கி பூசிக் கொள்ளவும் இல்லை என்பதுதான் வரலாறு. இதேபோல திருவிக தமது வீட்டுக்கு வந்த போது, எப்போதும் திருவிக குளித்தவுடன் திருநீறு வைப்பது வழக்கம் என்பதால் தந்தை பெரியாரே திருநீறு எடுத்து திருவிகவிடம் கொடுத்த நிகழ்வும் நடந்திருக்கிறது. மதுரை ஆதீனத்தை நாங்கள் சந்திக்க சென்ற போது, எங்களை முகம் பார்க்காமலேயே திருநீறை கையில் எடுத்தவர்.. எங்களைப் பார்த்தவுடன் ஓ, தாங்களா? என கேட்டு திருநீறை கொடுக்காமல் நிறுத்திக் கொண்டார். இவ்வாறு கொளத்தூர் தா.செ. மணி நமது ஒன் இந்தியா தமிழிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications