மிஞ்சிட்டாரே உதயநிதி.. கவனிக்கும் டெல்லி.. இன்று திமுக அனைத்து அணிசெயலாளர்கள் கூட்டம்.. இதான் விஷயமா
சென்னை: நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும், மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை, திமுக அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்துள்ள நிலையில், திமுகவின் அனைத்து அணிச்செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.. என்ன காரணம்?
கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாககூறி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தகோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது.

உதயநிதி: இதை முன்னிறுத்தி, நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞரணி கையில் எடுத்துள்ளது. அந்தவகையில், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி, நேற்றுமுன்தினம், சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்திருந்தார்.
இந்நிலையில், திமுகவின் அனைத்து அணிச்செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இது தொடர்பாக, திமுக தலைமைக்கழகம் அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கையில், "நீட்" தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில், திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில், "நீட் விலக்கு, நம் இலக்கு" எனும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை 21.10.2023 அன்று காலை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து முதல் கையெழுத்திட்டார்.
அணிசெயலாளர்கள் கூட்டம்: நீட் தேர்வு விலக்கினை மக்கள் போராட்டமாக மாற்றும் வகையில், இக்கையெழுத்து இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக, தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமம் முதல் பட்டணக்கரை கொண்டு சென்றிட ஏதுவாக, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், வருகிற 23.10.2023 திங்கட்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில், "தி.மு.கழகத்தின் அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம்" காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.
இந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கழக அனைத்து அணிச் செயலாளர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கையெழுத்துக்கள்: அந்தவகையில், இன்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.. தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கம், அடுத்த 50 நாட்களில், மாணவர்கள் பேராசிரியர்கள் கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என 50 லட்சம் பேரிடம் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கையெழுத்து பெற திமுக முடிவு செய்திருக்கிறது..
திமுகவின் மாவட்ட,மாநகர அமைப்பாளர்கள் மற்ற நிலைகளில் உள்ள அமைப்பாளர்கள் மூலமாக கையெழுத்து இயக்கத்தை தீவிரப்படுத்தி 50 நாட்களுக்குள் பணியை செய்து முடித்திட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறார்.
ஆலோசனை கூட்டம்: அந்தவகையில், நீட் தேர்வை ரத்து செய்ய, மத்திய அரசை வலியுறுத்தி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்படவுள்ளது. இந்த கையெழுத்து ஆவணங்கள் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக, திமுகவில் உள்ள அனைத்து அணிகளின் செயலாளர்களுடனும் இன்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
"மத்திய அரசு நீட் விவகாரத்தில் அலட்சியம் காட்டினால் ஜல்லிக்கட்டு போன்ற வீரமிக்க ஒரு போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்கிறேன்" என்று நேற்றுமுன்தினம், உதயநிதி கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications