Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிஞ்சிட்டாரே உதயநிதி.. கவனிக்கும் டெல்லி.. இன்று திமுக அனைத்து அணிசெயலாளர்கள் கூட்டம்.. இதான் விஷயமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும், மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை, திமுக அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்துள்ள நிலையில், திமுகவின் அனைத்து அணிச்செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.. என்ன காரணம்?

கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாககூறி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தகோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது.

Udhayanidhi Stalin and DMK All Wing Secretaries-meeting is going to be held today

உதயநிதி: இதை முன்னிறுத்தி, நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞரணி கையில் எடுத்துள்ளது. அந்தவகையில், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி, நேற்றுமுன்தினம், சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்திருந்தார்.

இந்நிலையில், திமுகவின் அனைத்து அணிச்செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இது தொடர்பாக, திமுக தலைமைக்கழகம் அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையில், "நீட்" தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில், திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில், "நீட் விலக்கு, நம் இலக்கு" எனும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை 21.10.2023 அன்று காலை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து முதல் கையெழுத்திட்டார்.

அணிசெயலாளர்கள் கூட்டம்: நீட் தேர்வு விலக்கினை மக்கள் போராட்டமாக மாற்றும் வகையில், இக்கையெழுத்து இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக, தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமம் முதல் பட்டணக்கரை கொண்டு சென்றிட ஏதுவாக, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், வருகிற 23.10.2023 திங்கட்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில், "தி.மு.கழகத்தின் அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம்" காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.

இந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கழக அனைத்து அணிச் செயலாளர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கையெழுத்துக்கள்: அந்தவகையில், இன்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.. தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கம், அடுத்த 50 நாட்களில், மாணவர்கள் பேராசிரியர்கள் கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என 50 லட்சம் பேரிடம் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கையெழுத்து பெற திமுக முடிவு செய்திருக்கிறது..

திமுகவின் மாவட்ட,மாநகர அமைப்பாளர்கள் மற்ற நிலைகளில் உள்ள அமைப்பாளர்கள் மூலமாக கையெழுத்து இயக்கத்தை தீவிரப்படுத்தி 50 நாட்களுக்குள் பணியை செய்து முடித்திட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறார்.

ஆலோசனை கூட்டம்: அந்தவகையில், நீட் தேர்வை ரத்து செய்ய, மத்திய அரசை வலியுறுத்தி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்படவுள்ளது. இந்த கையெழுத்து ஆவணங்கள் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக, திமுகவில் உள்ள அனைத்து அணிகளின் செயலாளர்களுடனும் இன்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

"மத்திய அரசு நீட் விவகாரத்தில் அலட்சியம் காட்டினால் ஜல்லிக்கட்டு போன்ற வீரமிக்க ஒரு போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்கிறேன்" என்று நேற்றுமுன்தினம், உதயநிதி கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+