கைவிரித்த மத்திய அரசு.. உதவி கரம் நீட்டும் உதயநிதி! தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்
சென்னை: உலக செவித்திறன் மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கான சர்வதேச போட்டி பிரேசில் நாட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையம் நிதியுதவி செய்ய மறுத்திருந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக வீரர்களுக்கு, மாநில அரசு சார்பில் நிதி வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
ஜனவரி 14 முதல் 20 வரை பிரேல் நாடடில், சாவ் பாலோவில் உலக செவித்திறன் மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கான சர்வதேச போட்டி நடைபெறுகிறது. 14-18 வயதுக்குட்பட்ட பிரிவில் தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து மற்றும் நீச்சல் ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்க நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் இருக்கும் நிலையில், மத்திய அரசு இவர்களுக்கான நிதியை வழங்க முன்வரவில்லை.

அதாவது, "இந்த விளைாயட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் திட்டம் அரசாங்கத்தின் செலவில் அங்கீகரிக்கப்படவில்லை" என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் கூறிவிட்டது. இதனால் இளைஞர்கள் இதில் பங்கேற்க அனுமதியும் வழங்கப்படவில்லை. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் செவித்திறன் மாற்றுத் திறனாளிகளான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வர்ஷினி ஆகியோர் தேசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு தடகள போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளனர்.
பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாவுலோ (Sao Paulo)-வில் ஜனவரி 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ள முதலாவது உலக செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான இளைஞர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுத்து, இந்திய விளையாட்டு ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி 5 பேரின் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கும்படி உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, இந்த சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக ஐந்து பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் தமிழக அரசால் வழங்கப்படும் என இளைஞர் நலன் மட்டும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருப்பதாக குறிப்பிட்டார்.
எனவே ஐந்து பேரும் பிரேசில் சென்று போட்டியில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றும் உத்தரவாதம் அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications