உளுந்தூர்பேட்டை ரோட்டில் என்னவாம்.. சல்லுனு போய்ட்டே இருக்கலாம் போலயே.. துள்ளி குதிக்கும் பாமக..வாவ்
சென்னை: உளுந்தூர்பேட்டை - சேலம் ரோடு படுபிஸியாகிவிட்டது.. விரைவில் ஒரு நல்ல செய்தி வரப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் - உளுந்தூர்பேட்டை இடையே தேசிய நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே வருகிறது..
இந்த சாலையில் 8 இடங்களில் அமைந்துள்ள புறவழிச்சாலைகளில், 4 வழிச்சாலை திடீரென இரு வழிச்சாலையாக மாறி விடும் நிலையில், அதை கவனித்து சமாளிக்க முடியாமல் அந்த சாலையில் பயணிப்பவர்கள் தடுமாறி விடுகிறார்கள்.. இதன்காரணமாகவே, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன... கடந்த 2011 முதல் 2022 வரையிலான 11 வருடங்களில், 1036 பேர் உயிரிழந்திருக்கிறார்களாம்.

பாமக அதிரடி: இதையடுத்து, பாமக இந்த விவகாரத்தை கையில் எடுத்தது.. இந்த நெடுஞ்சாலையில் விபத்துகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இதற்கு உடனடியாக முடிவு காண வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி முயற்சி எடுத்தார்.. இதற்காக கடந்த செப்டம்பர் 2-ம் தேதி மத்திய நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில், சேலம் - உளுந்தூர் தேசிய நெடுஞ்சாலை பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் 8 இடங்களில் உள்ள இருவழி புறவழிச்சாலைகளையும் 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வேன்டும் என்று அன்புமணி கேட்டுக் கொண்டிருந்தார்.. இதையடுத்து கட்கரியிடமிருந்து, அன்புமணிக்கு நவம்பர் 2-ஆம் தேதியிட்ட பதில் கடிதம் வந்திருந்தது.
கடிதம்: அந்த கடிதத்தில், சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 8 புறவழிச் சாலைகளில் முதற்கட்டமாக ஆறு புறவழிச் சாலைகள் அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்குள்ளாகவும், மீதமுள்ள இரு புறவழிச் சாலைகள் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாகவும் 4 வழிச்சாலைகளாக விரிவுபடுத்தப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்..

புறவழிச் சாலைகளை 4 வழிப்பாதையாக மாற்ற டாக்டர் ராமதாஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏராளம்.. அத்துடன், அன்புமணியும் இதையே வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்திருந்தது பாமக தரப்பில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.. அதற்கேற்றவாறு, சாலை விரிவாக்க பணிகளும் தேசிய நெடுஞ்சாலையில் ஆரம்பமாகின. ஆனால், திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியவில்லை.. பணிகள் இன்னமும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மகிழ்ச்சி: முத்தம்பட்டி, செல்லியம்பாளையம், உடையாப்பட்டி போன்ற 8 இடங்களிலும் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன.. அதனால் எப்படியும் 4, 5 மாத காலத்திற்குள் மொத்த பணியும் முடிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளதால், முன்பைவிட இபபோது அதிக வேகம் எடுத்துள்ளது.. இது லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications