வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு புதிய சட்டம்! தவறு செய்தால் 100% அபராதம்! நிர்மலா மேஜர் அறிவிப்பு
சென்னை: புதிய வருமான வரிச்சட்டங்கள் ஏப்.,1 முதல் அமல்படுத்தப்படும், வருமான வரி தாக்கல் செய்வதற்கான நடைமுறை எளிமையானதாக மாற்றப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்,புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்ததைவிட அதிக அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதில் குறைவான முறைகேடுகள் கிரிமினல் குற்றமாக கருதப்படாது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வாகன விபத்துக்கான இழப்பீட்டிற்கு வரி விலக்கு வழங்கப்படும். விபத்து கால காப்பீடுகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
வருமான வரியில் மாற்றம்
ITR-1 மற்றும் ITR-2 படிவங்களைக் கொண்டவர்கள் ஜூலை 31 வரை வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம். சிறு கட்டணம் செலுத்தி வரி வருமானக் கணக்குகளைத் திருத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் போல் நிறுவனங்களுக்கும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசரம் நீட்டிக்கப்படுகிறது.

அதேபோல் இதுவரை பல்வேறு குழப்பங்களுக்கு உள்ளாகி வந்த 'மேன்பவர்' சேவைகளுக்கான கட்டணம், இனி வரி விதிப்பிற்காக "ஒப்பந்தக்காரர்களுக்கான கொடுப்பனவு" (Payment to Contractors) என்ற பிரிவின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. TDS விகிதம்: இதன்படி, இச்சேவைகளுக்கான கட்டணத்தில் 1% அல்லது 2% என்ற விகிதத்தில் வரி (TDS) பிடித்தம் செய்யப்படும்.
குறைந்தபட்ச வரி பிடித்த சான்றிதழ் (Lower TDS Certificate):
குறைந்த வருமானம் கொண்ட சிறு வரிதாரர்கள் (Small Taxpayers), தங்களுடைய வருமானத்திற்கு வரி பிடித்தம் தேவையில்லை அல்லது குறைவாக இருக்க வேண்டும் என நினைத்தால், இனி வருமான வரி அதிகாரியிடம் (Assessing Officer) நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
இதற்குப் பதிலாக, விதிகளின் அடிப்படையில் இயங்கும் ஒரு தானியங்கி ஆன்லைன் முறை (Rule-based Automated Process) அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் மிக எளிதாக 'Lower or NIL deduction certificate'-ஐப் பெற முடியும்.
இதன் நன்மைகள் என்ன?
நிர்வாகச் சிக்கல்கள் குறையும்: வரி அதிகாரிகளைச் சந்தித்து விண்ணப்பம் தாக்கல் செய்யும் நடைமுறை நீக்கப்படுவதால், கால விரயம் தவிர்க்கப்படும்.
வெளிப்படைத்தன்மை: தானியங்கி முறை என்பதால், தகுதியுள்ளவர்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ் கிடைக்கும்.
தொழில் புரிவது எளிதாகும்: சிறு நிறுவனங்கள் மற்றும் மனிதவள முகமைகளுக்கு (Manpower Agencies) இது பெரும் நிம்மதியை அளிக்கும்.
மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட் உரையை தாக்கல் செய்து உரையாடிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புனிதமான தைப்பூச நாளிலும், ரவி தாஸ் ஜெயந்தி நாளிலும் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். பணவீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதால் நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது . புதிய தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தி துறை பலமடங்கு வளர்ச்சி. கர்த்தவ்ய பவனில் தயாரித்த முதல் பட்ஜெட் இதுவாகும்
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் நாட்டு மக்களுக்கு நன்றிகள் . அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் . பல்வேறு நோய்களுக்கன மருந்தகள் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கிறது.
தொடர் வளர்ச்சி, உற்பத்தி அதிகரிப்பு, பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாக வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்படும். இதற்காக ரூ.10,000 கோடியில் பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. செமி கண்டக்டர் துறைக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உள்கட்டமைப்பு எந்திரங்களின் உற்பத்தி ஆலைகள் அமைக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஜவுளி துறையில் தன்னிறைவு பெறுவதற்கு புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி ஸ்வராஜ் திட்டம் என்ற பெயரில் 4 மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications