வங்கி கணக்கிற்கு வருது ரூ.5000.. மத்திய அரசின் சிக்ஸர்.. நாடு முழுக்க ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்தை 2030-31 நிதியாண்டு வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அந்த திட்டத்தில் பயன்பெறுபவர்களுக்கு நிதிபலன்கள் கிடைக்கும் சூழல் உள்ளது.

வங்கி கணக்கில் மாதந்தோறும் ₹5,000 வரவு வைக்கப்படும் மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டம் தற்போது பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் ஜனவரி மாத தொகை நேற்றும் இன்றும் பல லட்சம் ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களின் ஓய்வூதிய கால பாதுகாப்பிற்காக இந்தத் திட்டம் செயல்படுகிறது.

Tamil Nadu Government Notification

மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்தை 2030-31 நிதியாண்டு வரை நீட்டிப்பதற்கும், அதன் மேம்பாடு, விளம்பர நடவடிக்கைகள் மற்றும் நிதிப் பற்றாக்குறைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கும் இன்று ஒப்புதல் அளித்தது," என்று குறிப்பிட்டது. மத்திய அரசு அறிக்கையில் மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களை சென்றடையவும், திட்டத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் உதவும்.

அடல் பென்ஷன் திட்டம்

இந்தத் திட்ட நீட்டிப்பு, குறைந்த மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியக் கால வருமானப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இது இந்தியாவின் நிதிச் சேர்ப்பை மேம்படுத்தி, நாட்டை ஓய்வூதியச் சமூகமாக மாற்றும் இலக்குக்கு ஆதரவளிக்கிறது. மேலும், நிலையான சமூகப் பாதுகாப்பை அளித்து, 'விக்சித் பாரத் @2047' தொலைநோக்கு திட்டத்திற்குப் பங்களிக்கிறது.

அடல் பென்ஷன் யோஜனா, அமைப்புசாராத் துறைத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பாதுகாப்பு வழங்க மே 9, 2015 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம், 60 வயது முதல் மாதம் ₹1,000 முதல் ₹5,000 வரை உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்குகிறது.

திட்ட நிதி சந்தாதாரர் பங்களிப்பால் திரட்டப்படுகிறது. இது பென்ஷன் நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. சந்தாதாரர்கள் தங்களுக்குத் தேவையான ஓய்வூதியத் தொகையை (₹1,000 - ₹5,000) தேர்வு செய்து, மாதாந்திர, காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் 60 வயது வரை பங்களிக்கலாம்.

சந்தாதாரர் மறைவுக்குப் பின், துணைவர் அதே ஓய்வூதியத்தை வாழ்நாள் முழுவதும் பெறுவார். இருவரின் மறைவுக்குப் பின், 60 வயது வரை திரட்டப்பட்ட ஓய்வூதிய நிதியை நாமினி பெறுவார்.

18 முதல் 40 வயதுக்குள் உள்ள, சேமிப்பு அல்லது அஞ்சலகக் கணக்கு வைத்திருக்கும் இந்தியக் குடிமக்கள் இத்திட்டத்தில் சேரலாம். வருமான வரி செலுத்துவோர் இத்திட்டத்தின் கீழ் சேர தகுதியற்றவர்கள்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் பலன்கள் என்னென்ன?

அதிகாரப்பூர்வ அரசு ஆவணத்தின்படி, "2022 அக்டோபர் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு இத்திட்டத்தில் சேர்ந்த ஒருவர், விண்ணப்பித்த தேதிக்கு முன்போ அல்லது அப்போது ஒரு வருமான வரி செலுத்துபவராக இருந்தது பின்னர் கண்டறியப்பட்டால், அவரது APY கணக்கு மூடப்பட்டு, அதுவரை திரட்டப்பட்ட ஓய்வூதிய நிதி சந்தாதாரருக்குத் திரும்ப வழங்கப்படும்."

தரவுகளின்படி, 18 வயதில் மாதம் ₹210 செலுத்தி ₹5,000 ஓய்வூதியத்தைத் தேர்வு செய்யும் ஒரு சந்தாதாரரால், ₹8.5 லட்சம் திரட்ட முடியும். உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தை வழங்க, குறைந்த முதலீட்டு வருவாய் ஏற்பட்டால், மத்திய அரசு நிதிப் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்கிறது. அதிக வருவாய் கிடைத்தால், கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

ஜனவரி 19, 2026 நிலவரப்படி, அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் 8.66 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+