நாடு முழுக்க உள்ள.. அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. நாடாளுமன்றத்திலேயே மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: எட்டாவது மத்திய ஊதியக் குழுவின் (8th Central Pay Commission - CPC) கீழ், 50.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது மற்றும் அதற்கான நிதி ஏற்பாடு குறித்து அரசு பின்னர் முடிவெடுக்கும் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, மக்களவையில் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.
எட்டாவது ஊதியக் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்டது. இதன் வரையறை ஆணை (Terms of Reference - ToR) அக்டோபர் 28 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அங்கீகரிக்கப்பட்டது. நவம்பர் 3 அன்று நிதியமைச்சகம் மூலம் ஒரு தீர்மானமாக இது முறைப்படி வெளியிடப்பட்டது. குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்ட பின்னரே, அது நடைமுறைக்கு வரும் தேதி மற்றும் தேவையான நிதியை அரசு ஒதுக்கும் என பங்கஜ் சௌத்ரி தெரிவித்தார்.

8வது ஊதியக் குழு
ஊதியக் குழுவின் அமலாக்க தேதி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஜனவரி 1, 2026 அன்று அதை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதா என வினவப்பட்டது. ஆனால், தேதியை நிதித்துறை இணையமைச்சர் சௌத்ரி தெளிவுபடுத்தவில்லை.
யார் யார் பலனடைவார்கள் என்ற கேள்விக்கு, மத்திய அரசு தற்போது 50.14 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ளது என்றும், அத்துடன் சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனாளிகளாக உள்ளனர் என்றும் அமைச்சரின் பதில் குறிப்பிட்டது. இந்த நபர்கள், குழுவின் அறிவிக்கப்பட்ட வரையறை ஆணையில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு அரசு சேவைகள் மற்றும் நிறுவனங்களின் கீழ் வருகின்றனர்.
எட்டாவது மத்திய ஊதியக் குழு மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் ஊதியப் பரிந்துரைகளை வழங்குவார்கள். தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், பகுதிநேர உறுப்பினராக பேராசிரியர் புலக் கோஷ், மற்றும் உறுப்பினர்-செயலாளராக பங்கஜ் ஜெயின் ஆகியோர் பணியாற்றுவார்கள்.
விரைவில் வழங்கப்படும் பரிந்துரை
ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உருவாக்குவதற்கான வழிமுறை விரைவில் வகுக்கப்படும் என்று சௌத்ரி தெரிவித்தார். குழு அமைக்கப்பட்டு 18 மாதங்களுக்குள் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இப் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, ஊதியக் குழு அமல்படுத்தப்படும் தேதியை மத்திய அரசு முடிவு செய்யும். ஆகவே, மத்திய அரசு ஊழியர்களும், முன்னாள் ஊழியர்களும் கூட உடனடியாக இந்த பலன்களைப் பெற மாட்டார்கள்.

அதேபோல் 69 லட்சம் ஊழியர்களுக்கு ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு மற்றும் வருங்கால ஊதியக் குழுவின் பலன்கள் கிடைக்காது என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. நிதிச் சட்டம் 2025-ன் கீழ் இந்த சலுகைகள் நிறுத்தப்படும் என்ற தகவல் முற்றிலும் தவறானது என அரசு தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய அரசு 8-வது மத்திய ஊதியக் குழுவின் (8th CPC) விதிமுறைகளை (ToR) அறிவித்ததைத் தொடர்ந்து, அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் கூட்டமைப்பு (AIDEF) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டமைப்பு, இந்த விதிமுறைகள் 69 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களை புறக்கணிப்பதாகவும், இந்த முடிவை நியாயமற்றது மற்றும் பாகுபாடானது என்றும் சாடியுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஓய்வூதியதாரர்களை ஊதியக் குழுவின் வரம்பில் இருந்து விலக்குவது, வழக்கமான நடைமுறைகளுக்கு எதிரானது என்றும், அவர்களின் பலன்களை முறையாக மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை மறுப்பதாகவும் AIDEF வலுவாக வாதிட்டுள்ளது.
நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதம்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில், ஊழியர் கூட்டமைப்பு ஒரு முக்கிய அம்சத்தைக் குறிப்பிட்டது. அதாவது, 8வது மத்திய ஊதியக் குழுவின் செயல்பாட்டு விதிகளில் (ToR), ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் சேர்க்கப்படவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாகும். "குறிப்பாக, மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய திருத்தம் தொடர்பான செயல்பாட்டு விதிகள், 7வது மத்திய ஊதியக் குழுவுக்கு வழங்கப்பட்ட விதிகள் முற்றிலும் வேறுபடுகின்றன.. 69 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களை 8வது ஊதியக் குழுவின் வரம்புக்குள் சேர்க்காதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்காக உழைத்த அவர்களை, இந்த ஊதியக் குழுவின் வரம்பில் இருந்து விலக்கி வைப்பது நியாயமல்ல" என்று கூட்டமைப்பு தெரிவித்தது.
இருப்பினும், அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த ஊகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அரசு ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. "இந்தக் கூற்று தவறானது. CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021-இன் விதி 37 திருத்தப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரியும் முன்னாள் அரசு ஊழியர் ஒருவரின் நடத்தை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டால் மட்டுமே, அவர்களின் ஓய்வூதியப் பலன்கள் பறிமுதல் செய்யப்படும்" என்று அரசு தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டது.
குறிப்பிட்ட பிரிவில் மட்டுமே மாற்றம்
CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021-இல் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய திருத்தம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மற்றும் நிதி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, விதி 37(29C) என்ற ஒரு குறிப்பிட்ட பிரிவில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications