வராத ரூ.573 கோடி.. பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஏற்றே ஆக வேண்டும்! ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. நிதியை விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் அதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழக அரசு பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசு சார்பில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் (சமக்கிரஹா சிக்ஷா அபியான்) கீழ் ஆண்டுதோறும் 4 தவணையாக மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நடப்பு கல்வியாண்டிலும் (2024-25) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.

dharmendra pradhan mk stalin

நடப்பாண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட நிதியாக தமிழகத்துக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.1,434 கோடியாகும். மீதமுள்ள ரூ.2,152 கோடி நிதி மத்திய அரசால் வழங்கப்படும். இதில் மத்திய அரசின் முதல் தவணை தொகை ரூ.573 கோடி கடந்த ஜூன் மாதமே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை நிதியைத் தராமல் மத்திய அரசு நிறுத்தி

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை 2020-யை ஏற்காதது, அதன் கீழ் வரும் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதது தான் நிதி நிறுத்தததற்கு காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், ‛‛தமிழகம் உட்பட சில மாநிலங்களில் 'சமக்ரா சிக்‌ஷா' திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய முதல் தவணை நிதி விடுவிக்கப்படவில்லை. 2024-25-ம் கல்வியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2,152 கோடியாகும்(60சதவீதம்). மத்திய அரசின் அந்த பங்களிப்பை பெற கு ஏதுவாக முன்மொழிவுகள் ஏப்ரல் மாதமே சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், முதல் தவணையான ரூ.573 கோடியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடியையும் மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. பிஎம்ஸ்ரீ பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாக அமல்படுத்துவதை, தற்போதைய சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் நிதியை அனுமதிப்பதற்கான முன்நிபந்தனையாக இணைக்க மத்திய அரசு முயற்சிப்பது தெரியவந்துள்ளது. இதற்கானபுரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மாநிலங்களுக்கு நிதி தரப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள குறிப்பிட்ட சில விதிகள் ஏற்புடையதாக இல்லை. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

தற்போது நிதி விடுவிக்கப்படாததால் தமிழக பள்ளி கல்வித்துறையில் தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி இதில் நேரடியாக தலையிட வேண்டும்'' என கூறியிருந்தார்.

மத்திய அரசின் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம் ஸ்ரீ பள்ளி எனும் திட்டம் உள்ளது. இதன்மூலம் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இத்திட்டத்தில் டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் இதுவரை இணையவில்லை. மேலும், தமிழகம் மட்டும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர மும்மொழி கொள்கையில் விலக்கு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்தது. ஆனால், அதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டதால் திட்டத்தில் தமிழகமும் சேராமல் உள்ளது.

இந்நிலையில் தான் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய கடிதத்தை எழுதியுள்ளார். அதில், மத்திய அரசின் சமக்கிரஹா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு கடந்த நிதியண்டில் வழங்க வேண்டிய 4 தவணை தொகையையும் மத்திய அரசு விடுவித்துள்ளது. நடப்பு ஆண்டில் ரூ.4,305.66 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை 2020ன் மாற்றத்தக்க பலன்களை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் குழந்தைகளுக்கு உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

'சமக்ரா சிக்‌ஷா' திட்டத்தின் கீழ் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்.புதிய தேசிய கல்வி கொள்கை 2020 என்பது தமிழக பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் யோசனை முழுமையாக ஆதரிக்கிறது. தாய்மொழி மற்றும் பன்மொழியை கற்பிப்பதில் இது உறுதியளிக்கிறது. உலகில் பழமையான செம்மொழிகளில் ஒன்றாகவும், இந்தியாவிலேயே பழமையான மொழியாகவும் தமிழ் இருக்கிறது. இது தேசிய பெருமைக்குரியது. பிரதமர் மோடி வழிக்காட்டலில் காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டது.

நாட்டில் உள்ள 14,500க்கும் அதிகமாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு கடந்த 2022 செப்டம்பர் மாதம் பிஎம் ஸ்ரீ திட்டம் தொடங்கப்பட்டது. இதுதொடர்பாக ஒவ்வொரு மாநிலமும் மத்திய கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும். தற்போது 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இணைய கையெழுத்திட்டுள்ளன.

தமிழ்நாடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதுதொடர்பாக நானும், கல்வித்துறை செயலாளரும் 6 கடிதம் எழுதினோம். இதையடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு ஒப்பந்தம் ஒன்றை வழங்கியது. இது மகிழ்ச்சியை தந்தது. ஆனால் அதன்பிறகு திருத்தியமைக்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தை வழங்கிய தமிழக அரசு, மத்திய அரசுக்கு வழங்கியது. அதன்படி தேசிய கல்வி கொள்கை தொடர்பான குறிப்புகள் கைவிடப்பட்டுள்ளது.

எனவே புதிய தேசிய கல்வி கொள்கை 2020 உடன் இணைந்த சமக்கிரஹா சிக்ஷா அபியானை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதால் கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்துவது மற்றும் பிராந்தியத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஒரு அளவுகோல் அமைக்க வழிவகை செய்யும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை மாநிலம் முழுவதும் ஏற்றுக்கொள்வது முக்கியம். இதனால் பிஎம் ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக கூறியது படி தமிழக அரசு கையெழுத்திட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+