கல்வி தொடர்பாக மாணவிகளை பேராசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைக்க தடை.. சென்னை பல்கலை
சென்னை: கல்வி தொடர்பாக மாணவிகளை பேராசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைக்க சென்னை பல்கலைக்கழக பதிவாளர் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளை தங்கள் வீடுகளுக்கு பேராசிரியர்கள் வரவழைப்பதும் அவர்களை தவறாக பயன்படுத்துவதும் நடைபெறுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் கல்வி தொடர்பாக மாணவிகளை பேராசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைக்க சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கல்வி தொடர்பாக மாணவிகளை பேராசிரியர்களோ, விரிவுரையாளர்களோ தங்கள் வீடுகளுக்கு அழைக்கக் கூடாது.
மாணவிகளை பேராசிரியர்கள் வெளியில் அழைத்துச் செல்வதோ, வெளியில் தங்குவதோ கூடாது. அவ்வாறு கல்வி தொடர்பாக தங்க வேண்டுமானால் பல்கலைக்கழகத்தில் முன் அனுமதி பெற வேண்டும்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பாலியல் புகார்களை விசாரிக்க பேராசிரியர் ரீடா ஜான் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே பாலியல் புகார்களை விசாரணை குழு, பதிவாளர், துணை வேந்தர் ஆகியோரிடம் மாணவிகளும் பேராசிரியைகளும் தெரிவிக்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது போல் அறிவிப்பு வெளியிடுவதால் மாணவிகள் தவறாக வழிநடத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் இது போன்ற அறிவிப்புகள் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications