கடைகளுக்கு செல்ல இத்தனை ரூல்ஸா.. தமிழகத்தில் இன்று முதல் அமலாகும் புதிய "அன்லாக்" விதிகள்.. கவனம்!
சென்னை: தமிழகத்தில் இனி கடைகளில் பொருட்கள் வாங்க, சாப்பிட செல்லும் நபர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிறைய முக்கியமான விதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
நாடு முழுக்க ஊரடங்கில் நாளை முதல் முக்கிய தளர்வுகள் கொண்டு வரப்படுகிறது. அன்லாக் 1.0 என்ற திட்டத்தின் கீழ் நாளை கோவில்கள், மால்கள், ஹோட்டல்கள் திறக்கப்பட உள்ளது. இந்த தளர்வுகள் மொத்தம் மூன்று கட்டமாக நாடு முழுக்க அமலுக்கு வரும்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் எப்போதும் போல கட்டுப்பாடுகள் தொடரும். நாடு முழுக்க கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும்.

தமிழகம் நாளை
தமிழகத்தில் நாளை இதே தளர்வுகள் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களின் 50% கூட்டத்துடன் ஹோட்டல்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவில்கள், வழிபாட்டு தளங்கள் நாளை முதல் இயங்கும். அதேபோல் மால்கள், ஷாப்பிங் காம்பிளக்ஸ் பகுதிகள் நாளை முதல் தமிழகத்தில் எப்போதும் போல இயங்கும். இது தொடர்பாக நிறைய முக்கியமான விதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடைக்கு செல்ல கட்டுப்பாடு
அதன்படி தமிழகத்தில் காய்ச்சல் அல்லது காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்கள் யாரும் கடைக்கு செல்ல கூடாது. இவர்களை கடைக்கு செல்ல அரசு அனுமதிக்கக்கூடாது. எல்லா வாடிக்கையாளர்களும் கடைக்கு செல்லும் முன் கைகளை கழுவ வேண்டும். அதேபோல் கடையை விட்டு வெளியே செல்லும் போதும் கைகளை கழுவ வேண்டும். இதற்கான கிருமி நாசினி வசதியை கடைகள் அனைத்திலும் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

மாஸ்க் அவசியம்
கடைக்கு செல்லும் எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் அணிவது கட்டாயம். மாஸ்க் இல்லாத நபர்களுக்கு பொருட்கள் விற்க கூடாது. அவர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது. அதே சமயம் மாஸ்க் அணிந்து கொண்டுதான் பணியாளர்கள் கடையில் பணிகளை செய்ய வேண்டும். சரியான சமூக இடைவெளியை மக்கள் கடைகளில் பின்பற்ற வேண்டும்.

கட்டாயம் அவசியம்
கடைகளுக்கு வெளியே மக்கள் வரிசையில் நிற்க வட்டங்கள் போடப்பட்டு இருக்க வேண்டும். இந்த வட்டங்களில் மட்டுமே மக்கள் நிற்க வேண்டும். கடையில் தேவையில்லாமல் எதையும் தொட கூடாது. காய்கறிகளை தொட்டால் அதை வாங்க வேண்டும். அதேபோல் வீட்டிற்கு சென்றதும் மக்கள் தங்கள் கைகளை கழுவ வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகள் மற்றும் கால்களை கழுவ வேண்டும்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications