ரிப்போர்ட்டில் ஷாக் விஷயமே இதுதான்.. வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் வில்சன் அதிர்ச்சித் தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) இதுவரை இல்லாத அளவுக்கு முன்னெப்போதும் காணாத சரிவைச் சந்தித்துள்ளதாக நிதியமைச்சர் என். மரிய வில்சன் கவலை தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் பதவியேற்றதுமே தமிழ்நாட்டின் நிதி நிலை சார்ந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்திருந்த வாக்குறுதியின்படி, மாநிலத்தின் கடன் சுமை மற்றும் வரவு செலவு கணக்குகள் அடங்கிய அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

TN Finance Minister

அப்போது பேசிய அவர், முந்தைய ஆட்சியாளர்களின் முறையற்ற நிதி நிர்வாகத்தால் மாநிலத்தின் சொந்த வருவாய் ஆதாரங்கள் சுருங்கி, ஒட்டுமொத்த நிதி நிலைமையும் கடுமையான பாதாளத்திற்குச் தள்ளப்பட்டுள்ளது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த வெள்ளை அறிக்கையின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:

ஒவ்வொரு தமிழர் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் சுமை!

இந்த வெள்ளை அறிக்கையின் மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் அம்சம் என்னவென்றால், தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு தனிநபர் மீதும் இருக்கும் கடன் சுமைதான்.

அறிக்கையின்படி, தமிழகத்தில் தனி நபர் மீதான கடன் ரூ.1,28,934 ஆக உயர்ந்துள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு லட்சத்து இருபத்தி எட்டாயிரத்திற்கும் அதிகமான கடனுடனேயே பிறக்கும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது.

28.3% கடன் சுமை

மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனோடு (GSDP) ஒப்பிடுகையில், தமிழகத்தின் கடன் விகிதம் மிக மோசமான எல்லையை எட்டியுள்ளது. மாநில மொத்த உற்பத்தியில் 28.3 சதவீதம் கடனாக உள்ளது. இந்த கடன் விகிதம், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தான் மிக அதிகம் என்று வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கொரோனாவை விட மோசமான வருவாய் பற்றாக்குறை

பொதுவாக பேரிடர் காலங்களான கொரோனா காலகட்டத்தில்தான் வருவாய் இழப்பும், பற்றாக்குறையும் உச்சத்தில் இருக்கும். ஆனால், ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கும் விதமாக, கொரோனா காலக்கட்டத்தை விடவும் 2021 - 2026 இடைப்பட்ட ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது என்று வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை இதுவரை இல்லாத உச்சமாக ரூ.78,324 கோடியாக அதிகரித்துள்ளது. வருவாயை பெருக்குவதற்கான தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் முந்தைய அரசிடம் இல்லாததே இந்த இமாலய பற்றாக்குறைக்குக் காரணம் என அரசு தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

மூன்று ரூபாயில் ஒரு ரூபாய் வட்டிக்கு மட்டுமே!

மாநிலத்தின் அன்றாட வரவு செலவுக் கணக்குகளை உற்றுநோக்கினால், தமிழக அரசின் கஜானாவிற்கு வரும் வருவாயில் பெரும்பகுதி கடனுக்கான வட்டி கட்டுவதற்கே செலவாகிறது என்பது தெரியவந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அரசின் வருவாயில் 3-ல் ஒரு ரூபாய் கடனுக்கான வட்டியைச் செலுத்தவே செல்கிறது.

அதாவது, மக்களுக்கான நலத்திட்டங்களுக்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் செலவிடப்பட வேண்டிய நிதியில் மூன்றில் ஒரு பங்கு, வட்டி என்ற ஒற்றை விஷயத்திற்காகவே முடக்கப்படுகிறது.

திமுக ஆட்சியில் இருமடங்கான கடன்

கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமை மிகத் தீவிரமாக உயர்ந்துள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் இருமடங்காக உயர்ந்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வ கணக்குகளுடன் வெள்ளை அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாத இலவசங்களும், நிதி விரயங்களும் கஜானாவை முற்றிலுமாக காலி செய்துள்ளன.

புதிய அரசின் அடுத்த கட்ட சவால்

முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு, பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த இமாலய கடன் சுமை மற்றும் வரவு செலவு கணக்குகளை வெளிப்படையாக மக்கள் மன்றத்தில் வைத்துள்ளது. "முந்தைய ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற நிதிப் பாதாளத்தில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுப்பது சாதாரண விஷயமல்ல; எனினும், நிதி நிலையைச் சீரமைத்து, சொந்த வரி வருவாயைப் பெருக்குவதற்கான கடுமையான மற்றும் தீர்க்கமான உத்திகளை இந்த அரசு விரைவில் நடைமுறைப்படுத்தும்" என நிதியமைச்சர் மரிய வில்சன் உறுதியளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+