நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்!
Recommended Video
சென்னை: நாத்திகர்களை விமர்சித்து இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வைகோ பேசிய பேச்சால் திராவிடர் இயக்கங்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
தம்மை ஒரு நாத்திகராக பிரகடனப்படுத்திக் கொண்டு திராவிடத்தின் போர்வாளாக வலம் வந்தவர் வைகோ. தமது ஆரம்பகால அரசியல் தொட்டே திராவிடர் இயக்க அடையாளமாக கருப்புத் துண்டுதான் வைகோவின் அடையாளம்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழாவில் வைகோ பேசிய பேச்சு, திராவிடர் இயக்கத்தை அதிர வைத்திருக்கிறது. இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாக வைகோ பேசியதுதான் இந்த அதிர்வுக்குக் காரணம்,

கோவிலுக்கு போனால் வாழ்த்துங்கள்
வைகோ தமது பேச்சில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, பழனி கோவிலுக்கு, திருப்பதிக்கு, காஞ்சிபுரத்துக்கு அத்திவரதரை தரிசிக்க என பக்தர்கள் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். மசூதிக்கு போகிறவர்களை வாழ்த்துவது போல- ஜெபக்கூடங்களுக்கு செல்வபவர்களை வாழ்த்துவது போல கோவில்களுக்குப் போகிறவர்களை வாழ்த்தலாம்.

கேள்விகள் வரும்
வீரமணி வேண்டுமானால் என்னுடன் இதற்கு உடன்படாமல் போகலாம். அப்படியானால் பெரியாரிடம் இருந்து விலகிவிட்டாயா? என்கிற கேள்வி வரலாம்.. வரும். 1940களில் பேசியதை அண்ணா 1960களில் பேசவில்லையே.. 50களில் பேசியதை 60 களில் பேசவில்லையே.. அது போர் தந்திரம். அதிகாரம் சனாதான எதிரிகள் கைகளுக்கு செல்லக் கூடாது என்பதற்கான வியூகம் இது.

நாத்திகர்கள் மீது விமர்சனம்
99% இந்துக்கள் இன்றும் கோவில்களுக்கு போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்கள் ஊரில் இருக்கிற 99% பேர் கோவில்களுக்கு போகிறார்கள். அதை தடுக்க முடியவில்லை உங்களால்.. பிறகு எதற்கு கோவிலுக்குப் போகிறவர்களை கிண்டல் செய்கிறீர்கள்? எங்கள் ஊரில் பாட்டனார் கட்டிய கோவிலுக்கு இப்போது கோபுரம் அமைத்து கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம். அது மக்களின் விருப்பம்.. அதைத்தான் செய்கிறோம் என்று வைகோ பேசினார்.

வைகோ மீது விமர்சனங்கள்
அவரது இந்தப் பேச்சானது கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. திராவிடர் இயக்கத்தினர் வைகோ மீது கடுமையாக விமர்சனங்களை வைத்தும் வருகின்றனர்.
-
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications