Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் அவருடைய பங்களிப்பை போற்றும் விதமாக, இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

ஏராளமான தேசிய விருதுகளை வைரமுத்து பெற்றிருக்கிறார். இந்நிலையில், இந்த விருது தன்னை மேலும் முனைப்புடன் இலக்கியத்தில் ஈடுபட வைக்கும் என்று வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.

Vairamuthu

ஞானபீட விருது என்றால் என்ன?

வாழ்நாள் முழுமைக்குமான இலக்கியப் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு ஞானபீடம் விருது வழங்கப்படுகிறது. தமிழில் இதுவரை 2 பேர் மட்டுமே இந்த விருதை பெற்றிருக்கின்றனர். இதற்கு முன்னர் கடந்த 1975ம் ஆண்டு எழுத்தாளர் அகிலன், அவரை தொடர்ந்து கடந்த 2002ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் இந்த விருதை பெற்றிருக்கின்றனர்.

இந்த விருது 1962ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிகவும் பழமையான இலக்கிய விருதுகளில் இதுவும் ஒன்று. டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தை சேர்ந்த, சாகு ஜெயின் குடும்பத்தினரால் நிறுவப்பட்ட பாரதிய ஞானபீடம் அறக்கட்டளைதான் இந்த விருதுகளை வழங்கி வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

பரிசு தொகை எவ்வளவு?

விருது பெறுபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். மட்டுமல்லாது சரஸ்வதி தேவியின் வெண்கல சிலை மற்றும் பாராட்டு பத்திரமும் வழங்கப்படும். கடந்த 2024ம் ஆண்டு, 59வது ஞானபீட விருதை, இந்திய கவிஞர் வினோத் குமார் சுக்லா பெற்றிருந்தார். தமிழகத்தை பொறுத்தவரை, 24 ஆண்டுகளுக்கு பிறகு விருது வழங்கப்பட்டிருக்கிறது.

வைரமுத்து இதற்கு முன்னர் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, சாகித்ய அகாடமி, கலைமாமணி விருது, பாவேந்தர் விருது, பாரதி இலக்கிய பரிசு போன்ற விருதுகளையும், 7 தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஞானபீட விருது வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் தனது x பக்கத்தில், "தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது! காலையில்தான் கவிப்பேரரசைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது!

தமிழில் இதுவரையில் அகிலனும் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது.

தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை வாழ்த்துகிறேன்! கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது" என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+