ஊரடங்கு: பூக்காரிகள் சிலருக்குப் பொருள் கொடுத்தேன்- நீங்களும் எல்லோருக்கும் உதவுங்கள்- வைரமுத்து
சென்னை: லாக்டவுனில் பூவும் வாழ்வும் வாடிப்போன பூக்காரிகள் சிலருக்குப் பொருள் கொஞ்சம் கொடுத்தேன்; நீங்கள் அனைவரும் எல்லோருக்கும் உதவுங்கள் என்று கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு:
ஊரடங்கில்
பூவும் வாழ்வும் வாடிப்போன
பூக்காரிகள் சிலருக்குப்
பொருள் கொஞ்சம் கொடுத்தேன்
பண்புடையீர்!
உங்களைச்
சூழ்ந்திருக்கும் சமூகத்தை
ஆழ்ந்து பாருங்கள்
அற்ற வயிறும்
இற்ற உயிரும்
எத்துணையோ?
சற்றே உதவுங்கள்
சிற்றுதவிக்கும் செழும்பயனுண்டு
சிற்றெறும்புக்கும் சிறுவயிறுண்டு
இவ்வாறு வைரமுத்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
Comments
English summary
Poet Vairamuthu has donated Corona Reilef Materials to women.