மானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள்.. கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: மானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள் என்று கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

ரத்தம் - வேர்வை - கண்ணீர்
மூன்றும்
பிறருக்குச் சிந்துமிடத்தே
பெருமையுடைத்து.

மானுடத்துக்கு ரத்தம் சிந்திய
மானுடன் பிறந்தநாள்
இந்த உலகம்
தியாகத்தால் இயங்குவதையே
திரும்பத் திரும்பச் சொல்கிறது.
உலகக் கிறித்துவ சமூகத்துக்கு
என் வணக்கமும் வாழ்த்தும்.
இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications