முன்னே வள்ளுவன் பின்னே பாரதி முழங்கினர் ஊருக்கு - அட இன்னும் நாடு திருந்தாவிட்டால்... வைரமுத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: "முன்னே வள்ளுவன் பின்னே பாரதி முழங்கினர் ஊருக்கு - அட இன்னும் நாடு திருந்தாவிட்டால்... "என பாரதியார் பிறந்த நாளில் கவிஞர் வைரமுத்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மகாகவி பாரதியாரின் 139வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பாரதியார் பிறந்த நாளை அவரது கவிதைகளை மேற்கோள் காட்டி செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் வள்ளுவரையும் பாரதியாரையும் ஒப்பிட்டு பதிவு செய்துள்ளதாவது:
'பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்' - வள்ளுவன்
'ஜாதிகள் இல்லையடி பாப்பா' - பாரதி
'உழுதுண்டு வாழ்வாரே
வாழ்வார்' - வள்ளுவன்
'உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்' - பாரதி
முன்னே வள்ளுவன் பின்னே பாரதி
முழங்கினர் ஊருக்கு - அட
இன்னும் நாடு திருந்தாவிட்டால்
இலக்கியம் ஏதுக்கு?
இவ்வாறு வைரமுத்து எழுதியுள்ளார்.













Click it and Unblock the Notifications