எழுபது என்பது முதுமை இளமை.. இளமையின் பெருமை.. ரஜினிக்கு வைரமுத்துவின் வாழ்த்து கவிதை!
சென்னை: எழுபது என்பது முதுமையின் இளமை அல்லது இளமையின் பெருமை என ரஜினிகாந்திற்கு கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் 70 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. ரஜினியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்பதற்காக ரஜினியின் போயஸ் தோட்ட இல்லம் அருகே ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
மனிதன், தர்மதுரை, அண்ணாமலை, பாட்ஷா, பாபா, ரோபோ, தர்பார் உள்ளிட்ட படங்களில் ரஜினியின் கெட் அப்களை நாடக கலைஞர்கள் போட்டுள்ளனர். அடுத்த ஆண்டு கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்துள்ளார்.
இதனால் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது வழக்கத்தை விட சற்று கூடுதல் கொண்டாட்டமாக இருக்கிறது. ரஜினிக்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கலை உலகில்
— வைரமுத்து (@Vairamuthu) December 12, 2020
என்
அணுக்கமான நண்பர்கள் சிலருள்
நெருக்கமான ஒருவர் ரஜினிகாந்த்.
எழுபதைத் தொடுகிறார்.
எழுபது என்பது
முதுமையின் இளமை
அல்லது
இளமையின் பெருமை.
உடல் நலத்தோடும்
மன வளத்தோடும்
பல்லாண்டு வாழத்
தொலைபேசியில் வாழ்த்தினேன்.
மகிழ்ச்சி; எனக்கும் அவருக்கும்.@rajinikanth pic.twitter.com/2JFgsY1yrA
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்
கலை உலகில்
என்
அணுக்கமான நண்பர்கள் சிலருள்
நெருக்கமான ஒருவர் ரஜினிகாந்த்.
எழுபதைத் தொடுகிறார்.
எழுபது என்பது
முதுமையின் இளமை
அல்லது
இளமையின் பெருமை.
உடல் நலத்தோடும்
மன வளத்தோடும்
பல்லாண்டு வாழத்
தொலைபேசியில் வாழ்த்தினேன்.
மகிழ்ச்சி; எனக்கும் அவருக்கும்.
என கவிதை நடையில் வைரமுத்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.