ஹைடெக் வசதி! வேற லெவலில் ரெடியாகும் வந்தே பாரத் ஸ்லீப்பர்.. எப்போது சேவை தொடங்கும்.. வெளியான அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் வரும் நவம்பர் மாதம் முதல் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கவாச் தொழில் நுட்பம், சிசிடிவி கேமரா வசதிகள், டச் செய்தால் ஓபனாகும் கதவுகள் என பல வசதிகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் தற்போது பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை முழுக்க ஏசி வசதி கொண்டது ஆகும். சொகுசான இருக்கைகள், தானியங்கி கதவுகள், பயோ டாய்லட்கள், வைஃபை வசதி என விமானத்திற்கு நிகரான சொகுசுகளுடன் வந்தே பாரத் ரயில்கள் உள்ளன.

Vande Bharat sleeper train service is likely to start in November

பிற ரயில்களுடன் ஒப்பிடும் போது வந்தே பாரத் ரயில்கள் செல்லும் வேகமும் அதிகம். இதனால், பயணிகள் மத்தியில் வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது நாடு முழுவதும் 55க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் சென்னை - நெல்லை, சென்னை - கோவை, சென்னை - பெங்களூர், கோவை- பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்து இருக்கை வசதி கொண்டவையாக உள்ளது. இதனால், நீண்ட தொலைவிற்கு ரயில்களை இயக்க முடியாத நிலை உள்ளது. இதனால், இரவு நேர பயணங்கள் மற்றும் பல மாநிலங்களுக்கு இடையேயான சேவையாக வந்தே பாரத் ரயிலை இயக்கும் விதமாக ஸ்லீப்பர் ரயிலை அறிமுகம் செய்யவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

தொலைதூரங்களுக்கு செல்லும் பயணிகள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை பெரிதும் எதிபார்த்து உள்ளனர். இந்த நிலையில் தான், வந்தே பாரத் ரயில் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வரும் நவம்பர் மாதம் இந்த ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே வட்டார தகவல்கள் கூறுகின்றன.

ஸ்லீப்பர் ரயில்களை பொறுத்தவரை இந்த ரயில் கவாச் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்படுகிறது. அதுபோக ஸ்விட்ச் மூலம் இயங்கும் கதவுகள், பெட்டிக்குள் சிசிடிவி வசதி, சுடு தண்ணீர் வசதி என விமானத்திற்கு நிகரான சொகுசுகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்..

டெல்லி - மும்பை, டெல்லி - ஹவ்ரா வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்படாலம் என சொல்லப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் சோதனை ஒட்டம் நடத்தப்பட்டு, நவம்பரில் அறிமுகம் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+