யாருங்க இந்த வனிதா.. இனி ஒருத்தரும் "வாலாட்ட" முடியாது.. நிம்மதி பெருமூச்சில் திருப்பூர்..!
திருப்பூர் முதல் பெண் கமிஷனராக வனிதா நியமிக்கப்பட்டுள்ளார்
சென்னை: திருப்பூர் மாநகர கமிஷனராக வி.வனிதா நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர்.. மாநகரில் ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி காவல் ஆணையராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
Recommended Video
நேற்றைய தினம், ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.. அந்த வகையில், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய கார்த்திக்கேயன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐஜியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து சென்னை ரெயில்வே ஐஜியாக பணியாற்றி வந்த வனிதா, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.... இதன் மூலம் திருப்பூரின் முதல் பெண் போலீஸ் கமிஷனர் என்ற பெருமையை வனிதா பெற்றுள்ளார்...

கமிஷனர்
கமிஷனர் வனிதாவை பொறுத்தவரை வேலூர் சரக டிஐஜியாக, பணியாற்றியவர்.. பிறகு. சென்னை கிழக்கு மண்டல இணையர் என அடுத்தடுத்த பொறுப்புகளை வகித்தவர்.. அதேசயமம், வனிதா, காவல்துறையில் ரொம்ப பிரபலம்.. சீனியர் அதிகாரி.. தைரியமானவர்.. ஒவ்வொரு துறையிலும், துணிச்சலான நடவடிக்கைகளை தயங்காமல் எடுத்தவர்.

இலக்கியவாதிகள்
எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ் ஆர்வம் உள்ளவர்.. காவல்துறையில் இதுபோன்ற இலக்கியவாதிகள் சொற்ப அளவே இருப்பார்கள்.. ஆனால் வனிதா, பாரதியார் முதல் அனைத்து இலக்கிய நூல்களையும் கற்றவர்.. பல மேடைகளில் ஆக்கமும் ஊக்கமும் தரும் சொற்பொழிவுகளை நடத்துவார்.. இவரது பேச்சுக்கள் அனைத்தும் இளம்பெண்களுக்கு நல்ல உரமாக அமையும்.

வலிகள்
ஒருவிழாவில் இவர் பேசும்போது, "எவ்வளவு உயரத்துக்கு போனாலும், பெண் என்பவளுக்கு இந்த சமூகம் வலிகளை கொடுத்து கொண்டுதான் இருக்கும்.. எவ்வளவுதான் பதவி உயர்வு பெற்றாலும், பெண்போலீஸ் என்றுதான் சொல்கிறார்கள்.. ஆண்களை போலவே, வேலைகளிலும் வித்தியாசம் இல்லை, வாங்கும் சம்பளத்திலும் வித்தியாசம் இல்லை.. ஆனாலும் எங்களை பெண் போலீஸ் என்கிறார்கள். ஆனால் நாங்க "போலீஸ்" அவ்வளவுதான். வேறுபாடு எதுவும் இல்லை.

அக்கறை
இப்படி எங்களுக்கே இப்படின்னா, சாதாரணமாக தெருவில் நடந்து போகக்கூடிய ஒரு சாதாரண பெண்ணுக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கும்? பாரதி சொன்னாரே, பெண்களிடம் அந்த செருக்கு வேண்டும் என்று.. அதை நான் இப்போதுவரை எந்த பெண்களிடமும் பார்க்கவில்லை.. தன்னை அழகுபடுத்தி கொள்ள அக்கறை காட்டும் பெண்கள், தன்னை பர்சனாலிட்டியாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.. தன்னுடைய சுய ஆளுமையை பெண்கள் உணர்ந்து மேலே வர வேண்டும்" என்பார்.

நெகிழ்வு
அந்த வகையில், திருப்பூருக்கு கமிஷனராக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்களுக்கான பாதுகாப்பு அங்கு நிச்சயம் என்று நம்பப்படுகிறது.. இனி ஒருத்தரும் பெண்களிடம் வாலாட்டவும் முடியாது.. ஒரு பெண் தங்கள் மாவட்டத்துக்கு முதன்முதலில் கமிஷனராகி வந்திருப்பதால் திருப்பூரே நெகிழ்ந்து கிடக்கிறது. .
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications