திருமாவளவனுக்கு ஒரு மாதம் கம்ப்ளீட் ரெஸ்ட்! பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை! வெளிநாடு? வெளிமாநிலம்?
சென்னை: டைஃபாய்டு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவன் அடுத்த ஒரு மாத காலத்துக்கு முழு ஓய்வில் இருக்க திட்டமிட்டுள்ளார்.
கட்சிக்காரர்கள், கட்சிப்பணிகள், அரசியல் நிகழ்வுகள் என எல்லாவற்றிலிருந்தும் ஒரு மாத காலம் ஒதுங்கியிருக்க முடிவெடுத்துள்ள அவர் அடுத்த ஒரு மாத காலம் உடலையும், மனதையும் புத்துணர்வு பெற வைக்கும் வகையில் தியானம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபடவுள்ளாராம்.

சிறுத்தை பதுங்குவது பாய்வதற்கு தான் எனக் கூறும் அவருக்கு நெருக்கமானவர்கள், ஒரு மாதத்திற்கு பிறகு நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் களமாடும் திட்டத்தை கையில் வைத்திருக்கிறார் என்கிறார்கள். கடந்த முறையை போல் இல்லாமல் இந்த முறை 3 தொகுதிகளை திமுகவிடம் கேட்டு வாங்கும் யோசனையில் உள்ள திருமாவளவன் அதற்கான காய் நகர்த்தலிலும் ஈடுபட்டுள்ளார்.
விசிகவின் கட்டமைப்பு வலிமைப்படுத்தப்பட்டுள்ளதையும், உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் புள்ளி விவரங்களுடன் திமுகவிடம் எடுத்துச்சொல்ல தயாராகி வருகிறார். இதனிடையே விசிகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
திருமாவளவன் தொடர் அலைச்சல், பயணம், என இருப்பதால் நுரையீரல் தொற்று பிரச்சனையும் அவ்வப்போது அவதிப் படுத்துவதால் கேரளாவில் அதற்கான இயற்கை சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு ஓய்வெடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே திருமாவளவன் ஓய்வு குறித்து அவருக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவரிடம் நாம் பேசிய போது, ''தலைவர் ஒரு மாதம் ஓய்வெடுக்கப் போவது உறுதி. வெளிநாட்டிலா, வெளிமாநிலத்திலா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் இல்லை. இங்கிருந்தால் தொண்டர்கள், நிர்வாகிகளை சந்திக்காமல் இருக்க முடியாது.'' என்று மட்டும் கூறினார்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துரை வைகோ, தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் திருமாவளவனை அவர் சிகிச்சை மேற்கொண்டு வரும் சூர்யா மருத்துவமனைக்கே சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். டிஸ்சார்ஜ் ஆகிய பிறகு நலம் விசாரிக்க வேண்டி கட்சி நிர்வாகிகள் அதிகம் சென்னைக்கு படையெடுப்பார்கள் என்பதால் தான் இந்த குறைந்தநாள் ஓய்வுத் திட்டமாம்.
-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications