கொரோனா ஹாட்ஸ்பாட் மையங்களாகும் காய்கறி சந்தைகள்.. தொடர்ந்து மூடப்படும் கடைகள்.. மக்கள் கவலை
சென்னை: தமிழகத்தில் உள்ள காய்கறி சந்தைகளில் கொரோனா அதிகம் பரவுவதும் கடைகள் மூடப்படுவதும் மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் 364 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.
இதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,117ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளது சென்னையில்தான். தமிழகத்தில் ஆரம்பத்தில் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வந்தவர்களால் கொரோனா பரவியதாக சொல்லப்பட்டது.

சோதனை
இதைத் தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டு திருமழிசைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் திருவான்மியூர் காய்கறி சந்தையிலும் வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அங்கிருந்த மற்றவர்களுக்கும் சோதனை நடத்தியதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரவியது தெரியவந்தது.

எம்ஜிஆர் நகர்
இதையடுத்து சென்னை எம்ஜிஆர் நகர் காய்கறி சந்தையிலும் வியாபாரிகள் இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் சக வியாபாரிகள் சுமார் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டனர். அவர்களது உறவினர்களுக்கும் அங்கு காய்கறி வாங்கியவர்களுக்கும் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொத்தவால்சாவடி
2 வியாபாரிகளுக்கும் கொரோனா எப்படி பரவியது என தெரியவில்லை. இதையடுத்து எம்ஜிஆர் மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. இது மக்களை அச்சமடைய வைத்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதிலுமுள்ள காய்கறி சந்தைகளில் சோதனை நடத்துவது அவசியமாகிவிட்டது. அது போல் சென்னை பிராட்வேயில் உள்ள கொத்தவால்சாவடி மார்க்கெட் பகுதி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இயங்காது என வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

வியாபாரிகள்
இது போல் காய்கறி சந்தைகள் எல்லாம் கொரோனா பரப்பும் ஹாட்ஸ்பாட்டுகளாக மாறியுள்ளது தமிழக மக்கள் வேதனையை தந்துள்ளது. இந்த மார்க்கெட்டுகளிலிருந்து காய்களை வாங்கி வந்து சாலைகளில் விற்பனை செய்யும் அனைத்து வியாபாரிகளுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications