Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செஞ்சுரி அடித்த கத்தரி.. முருங்கை பக்கம் மட்டும் போயிடாதீங்க சார்! கோயம்பேட்டில் காய்கறி விலை ’டாப்’

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர் கனமழை மற்றும் விரத காலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கோயம்பேடு காய்கறி சந்தையில் கத்தரிக்காய் விலை 100 ரூபாயை எட்டி உள்ளது. அதிர்ச்சி தரும் விதமாக முருங்கைக் காய் விலை 280 ஆக உயர்ந்திருக்கும் நிலையில், ஒரு முருங்கைக்காயே 25 ரூபாய் வரை உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறிகள் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் ஈரப்பதம் காரணமாக வெங்காயம் தக்காளி ஆகியவற்றின் விலை கணிசமாக அதிகரிக்கும்.

chennai koyambedu vegetables

குறிப்பாக கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்பன் விரதம், முருகனுக்கு மாலை அணிவது, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிவது என விரத காலங்கள் அதிகமாக உள்ளது. இதனால் இறைச்சி நுகர்வு குறைந்து மக்கள் காய்கறிகளை அதிகளவில் பயன்படுத்துவார்கள்..

இதனால் இந்த காலங்களில் இறைச்சி விலை வெகுவாக குறையும். அதே நேரத்தில் காய்கறிகளின் விலை அதிகரிப்பதும் வழக்கம் தான். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 260 முதல் 250 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் தற்போது 200 ரூபாயாக குறைந்து இருக்கிறது. ஆட்டு இறைச்சி விலை 800 ரூபாயாகவும், மீன்களின் விலை 200 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. அதே நேரத்தில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.

ஏற்கனவே வரத்து குறைவு காரணமாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போது வரத்து குறைவோடு. பக்தர்கள் விரதம் கடைபிடிக்கும் காலம் என்பதால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக பீன்ஸ், கத்தரிக்காய், கேரட், சின்ன வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது.

chennai koyambedu vegetables

இன்றைய நிலவரப்படி அதிகபட்சமாக காய்கறிகளில் முருங்கைக்காய் கிலோ 280 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரே ஒரு முருங்கைக்காய் மட்டும் 25 ரூபாய் வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் பீன்ஸ் 120 ரூபாய்க்கும், பீட்ரூட் 84 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 90 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கேரட் 95 ரூபாய்க்கும், இஞ்சி 200 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 90 ரூபாய்க்கும், பூண்டு 460 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 76 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஒரு கிலோ தக்காளி 62 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதே போல ஆப்பிள், நெல்லிக்காய், வாழைப்பழம், திராட்சை, கொய்யா, மாதுளை உள்ளிட்டவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது.

மேற்கண்ட விலைகள் அனைத்தும் கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விற்பனை விலை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கிலோ கணக்கில் காய்கறிகளை மொத்த விலையில் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் சில்லறை விற்பனை விலையில் பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்கின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை ₹100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.

மேலும் வரும் காலங்களில் கனமழை அதிகரிக்கும் என்பதாலும் விரத காலங்கள் தொடரும் என்பதாலும் காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது. இதனால் காய்கறிக்கு என்று வாங்கும் சம்பளப் பணத்தில் பெரும் தொகையை ஒதுக்க வேண்டி உள்ளதாக புலம்புகின்றனர் இல்லத்தரசிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+