வேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்
சென்னை: வேலூர் லோக்சபா தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து கலைஞர் கருணாநிதியின் காலடியில் காணிக்கையாக்குவோம் வாருங்கள் என திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்து வருபவர்கள் செய்த சதிவேலையால் தான் ஏற்கனவே வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்டது என புகார் கூறியுள்ளார் ஸ்டாலின். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்டாலின், வேலூரில் நடத்தப்பட்ட நாடகங்களை கடந்து தான் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 மக்களவை தொகுதிகளை கைப்பற்றியது.

பொய் புகாரால் வேலூரில் தேர்தல் நிறுத்தபட்ட போதும், தேனி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தவில்லை. தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கைகளை பொதுமக்களே நன்கு அறிவார்கள்.
எனினும் தேர்தலில் வெற்றி பெற்ற 37 திமுக கூட்டணி எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் வேகம் மற்றும் விவேகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். புதிய தேசிய கல்விகொள்கை, மும்மொழி திட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி எம்பி-க்கள் முழங்கினர்.
தமிழை புறகக்ணித்த அஞ்சல்தறை தேர்வு தமிழக எம்பி-க்களின் உரிமை முழக்கத்தால் ரத்தானது என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் மக்களுக்கான உருப்படியான திட்டங்கள் என்று எதையுமே சொல்ல முடியாது. வெற்று அறிவிப்புகள், வீண் சபதம், தமிழக மக்களுக்கு பச்சை துரோகம் இழைக்கும் நடவடிக்கைகள் தான் தொடர்கின்றன என சாடியுள்ளார்.
ஆளுந்தரப்பின் அதிகார பலம், பண பலம், கபட நாடக பலத்தை எதிர்கொள்ள திமுக-விடம் இருப்பது செயல் பலம் மட்டுமே. ஜனநாயக வழயில் பெறும் வெற்றியே மலர்ந்து மணம் வீசவிருக்கும் நல்லாட்சிக்கு அடித்தளமாக அமையும்.
எனவே வேலூர் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்கிட திமுக-வினர் உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 5 வரை ஆர்வம் சிறக்க அயராது பணியாற்றி, வெற்றிக் கனியைப் பறித்து, கருணாநிதியின் திருவடியில் காணிக்கை ஆக்கிடுவோம் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்!












Click it and Unblock the Notifications